தெலுங்கு பட தயாரிப்பாளர் கிஷான் மோடுகுமுடி. இவரது மனைவி சந்திரகலா. ஐதராபாத்தை சேர்ந்த இவர்கள், அமெரிக்காவுக்கு நடிகைகளை அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் வீடியோவை கைப்பற்றி உள்ளனர். அதில் இருக்கும் நடிகைகள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இதுகுறித்து கூறியதாவது,
விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை நான் வெளியிட்டால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படும். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரம் என்னிடம் உள்ளது. பாலியல் தொழிலுக்காக என்னையும் அந்த தம்பதியினர் அமெரிக்காவுக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை.
நடிகைகளுக்கு இருக்கும் புகழை வைத்து அவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வித்தியாசப்படும். மார்க்கெட் இழந்த நடிகைகள் அமெரிக்கா சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். பிரபல நடிகைகள், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இதில் அடக்கம் என்று கூறியுள்ளார்.