Skip to main content

மலாலாவை சுட்ட தீவிரவாதி கொல்லப்பட்டான் ??

Published on 16/06/2018 | Edited on 16/06/2018

 

terrorist

 

 

 

பாகிஸ்தானில் அமைதிக்கான நோபல்பரிசு பெற்றவர் மலாலா. அவர் தனது பள்ளி பருவத்தின்போது பள்ளி வாகனத்திலேயே தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததால் அவர் சுடப்பட்டார் என தகவல்கள் பரவி அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த துப்பாக்கி சூட்டினால் தன் தலைப்பகுதியில் பலத்த காயம் அடைத்த மலாலா சிகிச்சைக்கு பின் நலமாகினார்.

 

 

 

மலாலா மீதான துப்பாக்கி சூட்டை நடத்திய பாசுல்லா எனும் தாலிபன் தீவிரவாதி ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் பாசுல்லா ஏற்கனவே கொல்லப்பட்டான் என செய்திகள் பலமுறை வந்தன. இந்நிலையில் அவனது மரணத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.

 

பாகிஸ்தானில் தனியார் வானொலி ஒன்றில் நீண்ட உரைகள் நிகழத்தி முல்லா ரேடியோ என புகழ்பெற்றவன் பாசுல்லா. அண்மையில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஆப்கான் எல்லையில் குனர் மாகாணத்தில் நடந்த ஆளில்லா விமானத்தாக்குதலில் பாசுல்லா குறிவைத்து கொல்லப்பட்டான் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.   

சார்ந்த செய்திகள்

Next Story

உச்சகட்ட பதற்றம்; ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Illegal activities in jammu & kashmir

 

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக துப்பாக்கிச்சூடு மோதல் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி ஷோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளும், குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

 

இந்த நிலையில், குப்வாரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நடவடிக்கையின் போது, நேற்று (26-10-23) இரவு எல்லையில் ஊடுருவ பதுங்கிருந்த பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையின் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. 

 

இந்த தாக்குதலில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இன்னும் பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் என்ற காரணத்தினால் குப்வாரா எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

Next Story

சோளக்காட்டில் பதுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி; 2 பேருக்கு போலீசார் வலை

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

A country gun hidden in a cornfield; Police net for 2 people

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு ஒன்று உள்ளது. ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர் - மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலணித் தடங்கள் இருந்தன. இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

 

மேலும் அந்தப் பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் ரமேஷின் காட்டில் நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்து வேட்டைக்குச் செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியைத் தேடி அதே பகுதியைச் சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

 

போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் அவர்களது நண்பர்கள் மேலும் இரண்டு பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. வேட்டைக்குச் செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டையன், ராமர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.