நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி வரும் இருபதாம் தேதி பேசி கலந்துரையாட உள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளர்களிடம் தொடர்ந்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடிவருகிறார்.
இலவச சமையல் எரிவாயு திட்டத்தினால் பயனடைந்தவர்கள் மற்றும் மத்திய அரசின் சுகாதார திட்டங்களின் மூலம் பயனடைந்த 4 கோடி பயனாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். இதை அடுத்து வேளாண்துறை வளர்ச்சி மற்றும் விவசாயிகள் முன்னேற்றம் குறித்து வரும் 20-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காலந்துரையாட இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் உள்ள மூன்று லட்சம் பொதுசேவை மையங்களின் மூலம் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடக்கும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.