Skip to main content

வாவ் 2018 தருணங்கள்...திருமாவளவன் டாக்டர் பட்டம்...பெண்களே சுயமாக தொழில் தொடங்கலாம்...

Published on 31/12/2018 | Edited on 01/01/2019


 

sivan

 


இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டார். 
 

கர்நாடகாவை சேர்ந்த திருநங்கை அக்கை பத்மசாலி என்பவர் வாசுதேவ் என்ற சமூக செயற்பாட்டாளரை கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலத்தில் திருநங்கை ஒருவரின் திருமணம் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். 
 

கடந்த ஜனவரியில் பத்ம விருதுகள்: இளையராஜா, தோனி, விஜயலட்சுமி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 

பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர், இஸ்லாமியர்களை தவிர்த்துவிட்டு இந்தியா குறித்து பேச முடியாது என்றார்.
 

தென்கொரியா நாட்டில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தன்னுடைய மகன் கலந்துகொள்கிறார் என்பதற்காக ஹூவிலர் என்ற தந்தை, 17,000 கிமீ தொலைவிலுள்ள தென்கொரியாவுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்தார்.
 

ஆண்கள் துணையின்றி பெண்களே சுயமாக தொழில் தொடங்கலாம் என கடந்த பிப்ரவரி மாதத்தின்போது சவூதி அரேபியா அரசாங்கம் தெரிவித்தது. இது உட்பட பல புதிய ஆக்கப்பூர்வ அறிவிப்புகளை அவ்வரசாங்கம் வெளியிட்டது.
 

கர்நாடக மாநிலத்துக்கென்று தனியாக கொடியை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்து வைத்தார் அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா. மஞ்சள், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 3 நிறத்திலான கொடியின் நடுவே கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றிருக்கும்.
 

ஹதியா அவரது கணவருடன் சேர்ந்து வாழலாம்! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு. மேலும், ஹதியாவின் திருமண விருப்பத்திற்குள் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 

கடந்த மே மாதத்தில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் ஒன்றை கண்டுபிடித்து, அதற்கு  ‘அனிதா-சாட்’ என்று பெயர் சூட்டினார்.
 

‘யோகா எந்த மதத்திற்கும் சொந்தமல்ல’ என்று சர்வதேச யோகா தினத்தன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.
 

உலகிலேயே பெண்கள் வாகனங்கள் ஓட்ட தடை போட்ட ஒரே நாடாக பார்க்கப்பட்டுவந்த சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை கடந்த ஜூன் மாதத்திலிருந்து நீக்கப்பட்டது.
 

ஆசிரியர் பகவான் என்பவருக்கு பணி மாற்றம் வந்தது. ஆனால், பள்ளி மாணவர்கள் அவரை வேறொரு பள்ளிக்கு மாற்றக்கூடாது என்று பாசப்போராட்டத்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் அப்போது பெரிதும் பேசப்பட்டது.
 

தெலுங்கானாவை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் தங்கள் தொகுதியிலுள்ள கிராமத்தினருக்கு அச்சத்தை போக்க சுடுகாட்டில் ஒரு இரவு தனியாக படுத்து உறங்கிய சம்பவம் பெரும் வைரலானது. 
 

தாய்லாந்திலுள்ள ஒரு குகையில் 13 சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர். பிறகு ஒன்பது நாட்கள் கழித்து அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பல நாட்கள் போராட்டங்களுக்கு பின்னர் சிக்கிக்கொண்ட 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், மீட்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் மீட்பு பணியின்போது உயிரிழந்தார்.
 

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தற்போதைய தமிழக அரசு மறுத்தது. இதனை அடுத்து இரவோடு இரவாக வழக்கு தொடரப்பட்டது. அதன் பின் வழக்கை விசாரித்த நீதிபதி, காமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. முதல்வர், முன்னாள் முதல்வர் குறித்த நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது.  முதல்வர்களை மட்டுமே மெரினாவில் அடக்கம் செய்யலாம் என  விதிகளில் இல்லை என தெரிவித்தது. மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவும் அளித்தது.

 

thirumavalavan


கடந்த சில ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ‘மீனாட்சிபுரம் மதம் மாற்றம் - பாதிக்கப்பட்டோரின் பார்வை’ என்கிற தலைப்பில்  1981-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் நடந்த மதம் மாற்றம் குறித்து திருமாவளவன் ஆராய்ச்சி செய்தார். தான் மேற்கொண்ட முனைவர் (doctorate) பட்ட ஆய்வு அறிக்கையை  பல்கலைகழகத்தில் சமர்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முனைவர் பட்டம் பெற்றார்.
 

பத்து ஆண்டுகால போராட்டத்திற்கு பின் கடந்த செப்டம்பர் மாதத்தின்போது உச்சநீதிமன்றம் ஐபிசி 377 நீக்கப்பட்டு தீர்ப்பளித்தது.
 

செப்டம்பரில் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி.
 

‘சாம்பியன் ஆப் தி எர்த்' எனும் ஐநாவின் உயரிய சுற்றுசூழல் விருது இந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 52 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
 

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நக்கீரன் ஆசிரியர் விமான நிலையத்தில் ஆளுநர் மாளிகையின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது கைதை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நடைபெற்றது. ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் மாஜிஸ்திரேட் கோபிநாத். மேலும் வழக்கில் இருந்து ஆசிரியரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 

கடந்த நவம்பரில் கேரளாவைச் சேர்ந்த 96 வயது பாட்டி, அகபஷரலகபஷம் எழுத்தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றார். பின்னர், அந்த பாட்டிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்தளவில் நிவாரணப் பொருட்களை வைத்து அணுப்பிய கல்லூரி மாணவர்களுக்கு, வண்டி முழுவதும் இளநீரை போட்டு திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பெரிதாக பேசப்பட்டது.
 

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு அஞ்சலியின்போது, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆண் ஆளுமைகள் இருக்கும் அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக எதிர்நீச்சல் போட்டு வெற்றிகண்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டியிருந்தார்.
 

டிசம்பர் 9ஆம் தேதி சக்தி என்ற இளைஞரை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார் கௌசல்யா.
 

sonia gandhi


அண்ணா அறிவாலயத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. அதனை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.
 

மபியில் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் பதவியேற்ற நான்கு மணிநேரத்தில் விவசாயக் கடன்களை ரத்து செய்து முதல் ஆணையை வெளியிட்டார்.
 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, சாலையை ஆக்கிரமித்தோ பேனர்கள் வைக்க தமிழ்நாடு முழுக்க தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.
 

அசாம் மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய பேருந்து மற்றும் இரயில் பாலமான போகிபீல் பாலத்தை பிரதமர் மோடி டிசம்பர் 25ஆம் திறந்து வைத்தார்.
 

வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதியன்று அவருக்கு டெல்லி ராஜ்காட் அருகே ஒன்றரை ஏக்கர் பரப்பில், 10 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த ’சதைவ் அதல்’ எனும் பெயரிட்ட அவரின் நினைவிடம் திறக்கப்பட்டது. 

 

 

 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.