Skip to main content

அமைதிக்கான நோபல் பரிசு; யார் இந்த நர்கீஸ் முகமதி ?

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Who is Nargis Mohammadi who won the Nobel Peace Prize?

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஈரானில் மகளிர் உரிமைக்காக மட்டுமின்றி மனித உரிமைகளுக்காகவும் போராடிவரும் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

நர்கீஸ் முகமதி ஈரானில் உள்ள சாஞ்சான் நகரில் 1972ஆம்  ஆண்டு பிறந்தார். கராஜ் மற்றும் ஓஷ்னவியே ஆகிய பகுதிகளில் வளர்ந்த இவர் இமாம் கொமேனி சர்வதேச பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றார். அவர் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் எழுத்தின் மேல் ஆர்வத்தால் பல கட்டுரைகளை எழுதினார். பட்டம் பயின்ற பின், தன் வாழ்க்கையை தொழில்முறை பொறியாளராக தொடங்கி பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து அவர், பிரபலமான மாணவர் செய்தித்தாள் நிறுவனத்தில் இணைந்து பெண்களின் உரிமைகளை ஆதரித்து பல கட்டுரைகளை எழுதினார். அதில் ஈரான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததற்காக கடந்த 1998ஆம் ஆண்டு முதன் முதலாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தார். 

 

அதன் பிறகு, கடந்த 1999ஆம் ஆண்டில் சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள் நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்றிய தாகி ரஹ்மானியை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திற்கு பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இந்த சூழலில், தாகி ரஹ்மானி வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். ஆனாலும், நர்கீஸ் முகமதி தனது மக்களுடைய உரிமைக்கான குரலை நிறுத்தவில்லை.  இதையடுத்து இவர், ஒரு அரசியல் மாணவர் குழுவில் இணைந்து பெண்களின் விடுதலைக்காகவும், எளிய மக்களுக்காகவும் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார்.  இதன் காரணமாக, அவர் இரண்டு முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

Who is Nargis Mohammadi who won the Nobel Peace Prize?

 

12 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த முகமதியின் கணவர் தாகி ரஹ்மானி பிரான்ஸுக்கு குடிபெயர்ந்துவிட்டார். ஆனாலும், முகமதி ஈரானில் இருந்து கொண்டே தனது மனித உரிமை பணிகளை தொடங்கினார். அதில் பெண்களின் உரிமைகள் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை என எளிய மக்களின் விடுதலைக்காக பல பிரச்சாரங்களை செய்து வந்தார். 

 

இதன் பின்பு, நர்கீஸ் முகமதி பல சீர்திருத்த செய்தித்தாளில் பத்திரிக்கையாளராக பணியாற்றி பல போராட்டங்களை நடத்தினார். அதனை தொடர்ந்து, கடந்த 2003ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரானிய பிரபல எழுத்தாளரான எபாடி தலைமையிலான மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராக சேர்ந்தார் நர்கீஸ். அங்கு, 'The Reforms', 'The Strategy and the Tactics' போன்ற மக்களின் விடுதலைக்காக பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளார். அதில் குறிப்பாக, அவர் எழுதிய 'White Torture: Interviews with Iraninan Women Prisoners புத்தகம் சர்வதேச திரைப்பட விழாவிலும், மனித உரிமை மன்றத்திலும் சிறந்த புத்தகம் என்ற விருதையும் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2009ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் லாங்கர் விருது, UNESCO/ Guillerno Cano World Press Freedom விருதையும் பெற்றுள்ளார்.

 

Who is Nargis Mohammadi who won the Nobel Peace Prize?

 

அதன் பிறகு, கடந்த 2011 ஆம் ஆண்டில் அவர்,  மக்களின் விடுதலைக்காக போராடி சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவியதன் காரணமாக போலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதில் அவருக்கு சில ஆண்டுகள் சிறையில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை ஆகி வெளியே வந்தார்.  அதன் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டில், புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முகமதி மீண்டும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட  சிறையில் இருந்த முகமதி உட்பட பல பெண்கள் சிறையில் பல பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். அதுமட்டுமல்லாமல், முகமதிக்கு 75க்கும் மேற்பட்ட கசையடிகளும் வழங்கப்பட்டது. 

 

அவரது துணிச்சலான போராட்டம் மக்கள் மனதில் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை அவர் 13 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த முகமதி இதுவரை 154 கசையடிகள் வாங்கியுள்ளார்.  2003ஆம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு பிறகு, அமைதிக்கான நோபல் பரிசை நர்கீஸ் முகமதி வென்றுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை 19வது பெண்ணாகவும், இரண்டாவது ஈரானியப் பெண்ணாகவும் பெற்றுள்ள முகமதி, பெண்கள் உரிமைக்காக போராடி இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதே கள எதார்த்தம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது. 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.