Skip to main content

திருக்குறள் பற்றி வாஜ்பாய்! பகுதி - 4

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
vajpayee


இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்த்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது. தேசிய ஏடுகள் தவிர, வேறு எந்த மாநில மொழி ஏட்டிற்கும் பிரதமர் வாஜ்பாய் இதுவரை சிறப்பு பேட்டி அளித்ததில்லை. 1998 செப்டம்பரில் முதல்முறையாக நக்கீரனுக்கு பேட்டியளித்திருக்கிறார் பிரதமர் வாஜ்பாய். 
 

நக்கீரன் : நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் நீங்கள் முதல்வரிசையில் இருக்கிறீர்கள். உங்களைக் கவர்ந்த பேச்சாளர் யார் என்று சொல்ல முடியுமா?
 

வாஜ்பாய் : இளமைப் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சளார் எனது தந்தைதான். அவர் கலந்துகொள்ளும் கவி அரங்க நிகழ்ச்சிகளில் கவிதை பாடுவதோடு அவர் சொற்பொழிவும் ஆற்றுவார். கவிதையையும் அவர் உணர்ச்சி பாவத்துடன், கலைநயம் ததும்ப படிப்பார். அவரிடமிருந்தே நான் உணர்ச்சிப் பிரளகத்துடன் சொற்பொழிவாற்ற கற்றுக்கொண்டேன்; பிற்காலத்தில் எனது அரசியல் மேடை பிரசங்கங்கள் மக்கள் விரும்பி கேட்கும் அளவிற்கு அமைந்ததற்கு அப்பாவின் முன்னுதாரணமே காரணம். பாராளமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமானோர்களின் பேச்சுக்களை கேட்டு நான் வியந்திருக்கிறேன்.

கோவா விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் ஒருவரான நாத்பை நாடாளுமன்றத்தில் அற்புதமாகப் பேசுவார். அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பூபேஷ்குப்தாவும் தலைச்சிறந்த பேச்சாளராக திகழ்ந்தவர்.
 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அது இந்திய அரசியலுக்கு மிகச்சிறந்த பேருரையாளர்கள் சிலரை அளித்திருகிறது.  அண்ணாவின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது தமிழ் உரைகள் மிக இனிமையானதாகவும், மண்ணின் மணம் கமிழ்வதாகவும் இருக்கும்.
 

ஆங்கிலத்தில் பேசும்போதும் சரி; அவரது பேச்சு சக்திவாய்ந்ததாகவும் அதேசமயம் தெளிவு மிகுந்ததாகவும், திட்டவட்டமானதாகவும் அமைந்திருக்கும். அவர் பேசி முடித்ததும் நான் அவர் அருகில் சென்று அவரது உரையின் சிறப்புகளை கூறி பாராட்டுவேன். அதேபோலவே  அவரும் என்னுடைய பேச்சை பாராட்டி மகிழ்வர்.


1965ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அண்ணா இந்தி மொழி பற்றி பேசினார் அப்போது அவர் பேசியது நினைவுக்கு வருகிறது. "நாங்கள் இந்தியை ஏன் எதிர்க்கிறோம் ? அதுபற்றி வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி விளக்கிட விரும்புகிறேன். இந்தி மொழி மட்டுமில்லை; எந்த மொழி மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. எல்லா மொழிகளையும் நாங்கள் விரும்பவே செயகிறோம் இந்திமொழியைப் பொறுத்தவரையில் எனது அருமை நண்பர்  வாஜ்பாய் பேசுவதை கேட்கும் ஒவ்வொரு சமயமும் அதுவொரு நல்லமொழி என்றே நான் எண்ணுவேன்" என்று அண்ணா குறிப்பிட்டுட்டார்.   
 

நக்கீரன் : நீங்கள் சினிமாக்கள் பார்த்ததுண்டா? படங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள் எவை என்பதையும், உங்களை கவர்ந்த நடிகர் நடிகையர்கள் யார் யார் என்பதையும் சொல்ல முடியுமா?
 

வாஜ்பாய்  : படங்களை அடிக்கடி பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பது இல்லை. எப்போதாவது பார்ப்பதுண்டு.
 

நக்கீரன் : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் பற்றி உங்கள் கருத்து என்ன?
 

வாஜ்பாய் : தமிழ் மொழி மீதும், தமிழ் கவிதைகள் பற்றியும் எப்போதுமே எனக்கு மிக உயர்ந்த மதிப்பு உண்டு. எனினும் தமிழ்கவிதைகளை தமிழிலேயே படிக்க எனக்கு தெரியாது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்கவிதைகளை பலவற்றை நான் படித்திருக்கிறேன். சமூக சீர்திருத்தம், ஆன்மிகம், தேசபக்தி, தமிழ் கலாச்சாரத்தின் பெருமை போன்றவைகளை விளக்கிடும் அந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே தனித்தன்மை வாய்தவைகளாகா விளங்குகின்றன.
 

1996 மே மாதம் பா.ஜ.க. அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நாடாளமன்றத்தில் நான் பேசியபோது மகாகவி பாரதியார் 'எங்கள் தாய்' என்ற தலைப்பில் பாடிய 'முப்பது கோடி முகமுடையாள்; உயிர் மொய்ம்புறவொன்றுடை யாள்’ என்ற கவிதையை நான் மேற்கோள் காட்டினேன். அதை இன்னமும் பலர் நினைவுபடுத்தி பாராட்டிருக்கிறார்கள்.
 

திருவள்ளுவரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் தலை சிறந்த தத்துவஞானி, அவரது கவிதை வரிகள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வெளிச்சம் தரக்கூடிய வழிகாட்டியாகும். நான் எனது நூலகத்தில் அடிக்கடி திருக்குறளை எடுத்து படிக்கும் பழக்கம் உள்ளவனாகவே இருக்கிறேன்.
 

நக்கீரன் : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
 

வாஜ்பாய் : இந்தியில் நிரவாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கவும். பெங்காலியில் குருதேவர், ரவிந்தரநாத் தாகூரையும் நான் விரும்பி படிப்பேன்; இந்தி ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் கே.எம்.முன்ஷியின் படைப்புகள் எனக்கு பிடித்தவை. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ராஜாஜியும் ஒருவர்.

 

 


 

Next Story

கார்கில் போர்... வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை... மிரண்ட பாகிஸ்தான்!

Published on 26/07/2019 | Edited on 27/07/2019

1999ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தின் ஒருநாள் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இருவர்கள் மிகவும் பதட்டத்துடன் காவல்துறை தகவல் அலுவலகத்திற்கு ஓடி வருகிரார்கள். பதட்டத்தோடு இருந்த அவர்களை பார்த்த காவல்துறை அதிகாரிகள், அவர்களிடம் ஏதேனும் பொருட்களை தொலைத்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளனர். இல்லை என்று தலையாட்டிய அவர்களை, காவல்துறை அதிகாரிகள் சிரிப்போடு கடந்து சென்றார்கள். பின்னர் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள் என்று ஒரு பெண் காவல்துறை அதிகாரி அவர்களிடம் கேட்டபோது தான், அதுவரை எதுவும் பேச முடியாமல் விக்கித்து நின்ற அவர்கள் வாய்திறந்து அந்த "உண்மை"யை கூறினார்கள். "நாங்கள் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் சில நபர்கள் பெரிய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். எங்களை பார்த்த அவர்கள், திடீர் என்று துரத்த ஆரம்பித்தார்கள். நாங்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவந்து விட்டோம்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்த சிறுவர்கள் கூறிய இடம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதி. ஆம், அவர்கள் கூறிய அந்த ஒன்றை வார்த்தையே கார்கில் போருக்கு காரணமானது.
 

 kargil war victory special news



மற்ற இந்திய மாநிலங்களை விட காஷ்மீர் மாநிலத்துக்கு பல்வேறு சி்றப்புக்கள் உண்டு. காஷ்மீர் மாநிலத்துக்கு என்று தனிகொடி உண்டு. மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் 6 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க இயலாது என பல்வேறு சிறப்பு அதிகாரங்களை காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியலமைப்பின் 370 பிரிவு வழங்கியுள்ளது. பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் 5வது பெரிய மாநிலமாக காஷ்மீர் இருகிறது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளோடு தனது எல்லைகளை அந்த மாநிலம் பகிந்துகொண்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கார்கிலும் ஒன்று. கார்கில் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்கள் கொண்டு செல்லப்படும்.

இது ஸ்ரீநகரில் இருந்து 210 கி.மீ துாரத்தில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழாக இறங்கிவிடும். எனவே, இங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய, பாக்., ராணுவ வீரர்கள் இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் செப். 15 முதல் ஏப். 15 வரை கார்கில் மலைச் சிகரங்களில் இருந்து வெளியேறி விடுவார்கள். ஏப்ரல் மாதத்தின் மத்திய பகுதியில் இருந்து அவர்கள் மீண்டும் தங்களின் வழக்கமான பாதுகாப்பு பணிகளை அங்கு தொடர்வார்கள். இந்நிலையில் தான் கார்கில் மாவட்டதித்ல உள்ள ஒருபகுதியில் மர்ம நபர்கள் சிலர் புகுந்திருப்பதை சிறுவர்கள் வாயிலாக இந்திய ராணுவத்தினர் அறிந்துகொள்கிறார்கள். அந்த குறிப்பிட்ட இடத்திற்கு ராணுவ வீரர்கள் செல்ல முயன்ற போது பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டுப்பிடித்தனர். 'ஆப்ரேஷன் பாதர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திட்டமிடப்பட்ட அத்துமீறல் இது என்பதை இந்திய ராணுவத்தினர் கண்டுப்பிடித்தனர்.

 

 kargil war victory special news




பாகிஸ்தான் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னர் பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவை நாடியது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கிற்கு கடும் கண்டம் தெரிவித்ததால், வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்க உடன்பட்டது. 1999ம் ஆண்டு ஜூலை 26ல் இந்தியா, கார்கில் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றி இந்திய கொடியை பறக்க விட்டது. அந்த வெற்றிக்கு பிறகு பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், " உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட வெற்றிபெற முடியாத அவர்கள், எந்த நம்பிக்கையில் இந்தியாவுடன் போரிட வந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருகிறது" என்று கூறி தன்னுடைய வார்த்தை ஜாலத்தால், பாகிஸ்தானை பந்தாடினார் வாஜ்பாய். இதை வாஜ்பாய் குறிப்பிடுவதற்கும் காரணமும் இருக்கிறது. கார்கில் போருக்கு சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி பெற்ற சம்பவத்தை தான் வாஜ்பாய் தனக்கே உரிய பாணியில் கூறினார்.

 


 

Next Story

சென்னையில் வாஜ்பாய் அஸ்திக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
mk stalin


சென்னை கமலாலயத்தில் உள்ள வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால், கடந்த 16-ம் தேதி மறைந்தார். அவரது உடல், 17-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை கொண்டுவரப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி, தியாகராயநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 

mk stalin


இந்நிலையில், இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், வாஜ்பாயின் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மாநில பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து மற்ற தலைவர்களும் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.