Skip to main content

"அரண்மனை நாயே அடக்கடா வாயை" -எச். ராஜாவிற்கு வைகோ கண்டனம் 

Published on 19/04/2018 | Edited on 19/04/2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வாகன பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். கரிசகுளத்தில்  வைகோ ஸ்டெர்லைட்டினால் ஏற்படும் தீமை குறித்தும், பா.ஜ.க தேசியசெயலாளர் எச்.ராஜா குறித்தும் பேசியது.

  

vaiko angry speech

நான் சுருக்கமாக சொல்கிறேன் ஸ்டெர்லைட் ஆலையினால் நம் பிள்ளைகளுக்கு புற்றுநோய் வரும், நுரையீரல் நோய் வரும். எண்பது, தொண்ணூறு வயதுவரை வாழக்கூடியவர்கள் நாற்பது, ஐம்பது வயதிலேயே இறந்துவிடுவார்கள். முதலில் இந்த ஆலையை மஹாராஷ்டிராவில் அமைத்தனர் அங்கிருந்த விவசாயிகள் அங்கிருந்த இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். இந்த நிறுவனம் மிகப்பெரிய பணக்காரனுடையது. பின்பு தமிழ்நாட்டிற்கு வந்தான் இங்கு அப்போது அ.இ.அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது அவர்கள் அனுமதி அளித்துவிட்டனர். இந்த ஆலைத்திறந்த 22 ஆண்டுகளாக நான் போராடிவருகின்றேன். நானும் உண்ணாவிரதம், மறியல் என்று மாறி, மாறி போராட்டங்கள் நடத்தி வந்தேன். இதற்காக பல முறை கைதாகியுள்ளேன்.

ஆனால் ஒருமுறை கூட வன்முறையை கையாண்டதில்லை. நான் அதன் பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன், அதில் வெற்றிபெற்றேன். அவன் பணக்கார நிறுவனம் உடனே உச்சநீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிவிட்டான். அந்த வழக்கு மூன்றாண்டுகள் ஆனது கடைசியில் வெற்றிபெறுவேன் என்று நினைத்தேன் ஆனால் இல்லை. வைகோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது நடுவில் மது குடித்துவிட்டு ஒருவர் அவரிடம் ஏதோ கேட்க முற்பட்டார். அதற்கு வைகோ நீ குடித்துள்ளாய் அமைதியாக இரு நான் உன்னிடம் பேசமாட்டேன். நீ குடித்தால் உனக்கும் மட்டும் கேடில்லை உன் குடும்பத்திற்கும் தான் கேடு என்றார். மீண்டும் தனது பேச்சைத்தொடங்கினார். இங்கு நான் பேசுவதையெல்லாம் ஊடகத்தில் போடமாட்டார்கள் ஒருவர்  மது குடித்துவிட்டு வைகோ கூட்டத்தில் தகராறு செய்தார் என்றுதான் போடுவார்கள். 


எங்கள் அம்மா மாரியம்மா மதுக்கடைகளை மூடுவதற்கு  போரடியதால்தான் இறந்துபோனார்கள், இல்லையேல் இன்னும் இரண்டாண்டுகள் உயிரோடு இருந்திருப்பார். நான் மதுக்கடைகளை மூடுவதற்காக போராடினேன் கண்ணீர்ப்புகை அடித்தார்கள், சுடுவேன் என்று சொன்னார்கள் சுடு என்றேன்.டி.ஐ.ஜி முருகன் என்னை அன்று காப்பாற்றவில்லை என்றால் என்னை சுட்டிருப்பார்கள். அன்று நான் ஏன் மதுக்கடைகளை உடைத்தேன் பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள், வீட்டில் பெண்குழந்தைகள் இருக்க முடியவில்லை. அப்பனே பிள்ளைக்கு ஊற்றிக்கொடுக்கிறான், அவன் அத குடிச்சிட்டு பள்ளிக்கு செல்கிறான் அவனை பார்த்து வாத்தியார் பயப்புடுகிறார். நாடு கெட்டுவிட்டது நான் அரசியல் பிரச்சாரத்திற்கு பேச வரவில்லை. இந்த நாடு நன்றாக இருக்கவேண்டும், நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் பேசுகிறேன் .

vaiko angry speech

 

இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். நான் சொல்லும்போது அந்த மக்களுக்கு அதன் பாதிப்பு தெரியவில்லை. ஒருமுறை விஷவாயு தாக்கி அனைவரும் மயங்கி விழுந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது வைகோ சொன்னது உண்மைதான், இது ஆபத்தானது என்று உணர்ந்தனர். இப்பொது  முடியுள்ளார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இந்த சர்க்கார் அவனுகளுக்கு ஆதரவு கொடுக்கும். இந்த ஒன்றரை மாதம் அல்லது ஒரு மாதம் போராட்டம் தணிந்த பின் இந்த அரசே அவர்களை நீதிமன்றத்தில் வழக்குப்போட வைத்து பின் அதற்கான வழிகளை மேற்கொண்டு மீண்டும் ஆலை திறக்கப்படுகிறதா இல்லையா என்று மட்டும் பாருங்கள். அதற்கு என்ன செய்யவேண்டும் ஐம்பதாயிரம் மக்கள் அந்த ஆலையை அடித்து நொறுக்க வேண்டும். அதற்காகதான் மக்கள் கூட்டத்தை சேர்க்க வந்தேன். 

அதனால் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடக்கும் கூட்டத்தில் கரிசக்குளத்திலிருந்து சிலர் கலந்துகொள்ளவேண்டும். ஸ்டெர்லைட்டை நாம் மூடவில்லை என்றால் சுற்றுவட்டாரம் 40 கி.மீட்டருக்கு விவசாயமே இருக்காது. தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் புற்றுநோய் உள்ளவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அனைத்து ஊடகமும் ஆளுநரை பற்றி செய்திபோடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தை பேத்திபோல் எண்ணி தட்டிக்கொடுத்தாராம். நான்தான், தமிழ்நாட்டிற்கு ஆளுநர் வந்தவுடனே கேட்டேன் நீ புரோகித்தா இல்லை ப்ரோக்கரா என்று. இந்த ஆளுநர் எப்போது இந்த தமிழ்நாட்டை விட்டு செல்கிறாரோ அன்றுதான் தமிழகம் உருப்படும். இதற்கு நடுவில் எச்.ராஜா என்று ஒருவன் வைகோ பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்க முடியாது என்று கூறினான். எங்கள் ஆட்கள்  அவன்  வீட்டை சுற்றிவிடுவார்களோ என்று எனக்கு பயம்.

நான் சொன்னேன் அவன் ஏதோ தெரியாமல் பேசிவிட்டான் விட்டுவிடுங்கள் என்று கூறினேன். இவன் கலைஞர் குடும்பத்தை பற்றி தவறாக பேசியுள்ளான் என் இரத்தம் கொதிக்கிறது தி.மு.க தொண்டர்கள் அந்த கொடும்பாவியின் உருவ பொம்மையை கொளுத்தினார்கள். கலைஞரை முப்பது ஆண்டுகள் கண்களை காக்கும் இமைபோல் காத்தேன். ராஜாவின் பெயரை சொல்ல எனக்கு நாக்கு கூசுகிறது. இப்படித்தான் உங்கள் கட்சியில் அரசியல் தலைவர்களை இழிவாக பேசம்படி  சொல்லியிருக்கிறார்களா. "அரண்மனை நாயே அடக்கடா வாயை" நாய் என்றால் மோடியின் அரண்மனையில்  உள்ள நாய், அதனால்தான் அங்கிருந்து  குறைக்கிறது. நீ பெரியார் சிலையை இரவில் ஏன் உடைக்கிறாய் நேரம் சொல்லிவிட்டு வந்து  உடை பார்ப்போம். நீ படையை கொண்டு வா அப்படி  வந்தால் நான் வெட்டுவேன்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.