Skip to main content

ஸ்டாலின் மகனாக இருப்பதால் உதயநிதி அரசியலுக்கு வரக்கூடாதா? - ராஜீவ்காந்தி கேள்வி!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

hjk


தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாற்றுக் கட்சியில் இருந்து அடுத்த கட்சியில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுகவில் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களை இணைக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முக்கியப் பிரமுகரான வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தற்போது திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதுவரை விமர்சனம் செய்து வந்த கட்சியில் எவ்வாறு இணைந்தீர்கள், அதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

"தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்க்கும்  ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் தொடர்ந்து இருந்துவருகிறது" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தெரிவித்துருகிறார். பாஜகவோடு திமுக கூட்டணி வைத்துள்ளதே என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறாரே? அப்படி இருக்கும் போது சீமானை பாஜகவோடு எப்படி ஒப்பிடுகிறார்கள், அதற்கு முறையான காரணம் உங்களிடம் இருக்கிறாதா? 

 

கடந்த ஆறு மாதத்திற்கு முன்புவரை இந்த இயக்கத்தில் தான் நான் தொடர்ந்து இருந்துவந்தேன். அதிகாரத்தை எதிர்த்தோ, குருமூர்த்தி போன்றோர்களை எதிர்த்தோ இந்த இடைப்பட்ட காலத்தில் கட்சி என்ன விதமான எதிர்வினைகளை ஆற்றி இருக்கிறது? அவர்கள் ஆரியத்தின் மீது தொடர்ந்து மென்மையான பார்வையைப் பார்க்கிறார்கள். பெரிய எதிர்வினைகளை அவர் இன்றுவரை ஆற்றவில்லை. அவர் பி டீமாக இருக்கிறார் என்பதை தாண்டி கட்சி இப்படி இருக்கிறதே என்ற அச்சம் கட்சியில் இருந்த வரையில் தொடர்ந்து எனக்கு இருந்து வந்ததது. 

 

அந்த மென்மையான போக்கு திமுகவிடம் இல்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

 

கூட்டணி வைத்ததோடு, காரைக்குடியில் ராஜாவை வெல்ல வைத்ததை தாண்டி, இன உரிமையில் திமுக எங்கே விட்டுக்கொடுத்தது. நான் முக்கியமாக பார்ப்பது இட ஒதுக்கீடு. அதில் இதுவரை திமுக சமரசம் செய்துள்ளதா? பொருளியல் ரீதியாக இடஒதுக்கீடு இங்கே கொண்டு வரும்போது தான் இட ஒதுக்கீட்டின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும் என்று பயப்படுகிறேன். அதை யாரும் ஏற்க முடியாது. அதை திமுக தற்போது வரை எதிர்த்து வருகிறது. அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து என்பதற்கு இடமில்லையே. எனக்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. ஜனநாயக ரீதியாகக் கருத்து எங்கிருக்கிறதோ அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. திமுக அதில் தொடர்ந்து பயணித்ததால் நான் அந்த கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இணைந்தேன். மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இன்று வலிமையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற திமுக பயன்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

cnc

 

 

உங்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. அவருக்கு என்ன பின்புலம் இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்கள்? 

 

ஸ்டாலின் மகனாக இருப்பதால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது, பதவிக்கு வர கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம். அந்த வகையில் திமுகவுக்கு அவர் வந்தது தகுதியின் அடிப்படையில்தான் என்பதை நான் நம்புகிறேன். அந்த வகையில், இளைஞரணியை வழிநடத்த அவருக்கு முழு தகுதி இருக்கிறது. திராவிட இயக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று 'சோ' தொடங்கி குருமூர்த்தி வரை தொடர்ந்து வேலைசெய்தார்கள். தற்போதும் செய்து வருகிறார்கள். அதற்கு கண்முன் உள்ள உதாரணம் அதிமுக. அவர்கள் கட்சியில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சரவையில் என்ன மாற்றம் கொண்டுவர வேண்டும், யாரை நீக்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்பதில் இவர்களின் தலையீடு இருக்கிறது என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்டாலின் மகன் என்பதற்காக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் என்றால், ஸ்டாலின் மகனாக இருப்பதால் அவர் பதவிக்கு வரக் கூடாதா? என்பதை அவர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் ஆரியம் எப்போதும் விழிப்பாக இருக்கிறது. உதயநிதி விஷயத்தில் அதனால்தான் உள்ளே நுழைகிறார்கள்.

 


 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.