Skip to main content

1977 முதல் களம் காணும் அரசியல் பிரபலங்கள்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

tn assembly election political parties leaders

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இதனிடையே, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அந்த வகையில், 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் அரசியல் பிரபலங்கள் குறித்துப் பார்ப்போம்.

 

அண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 1971- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொடங்கி, கலைஞர் மறைவுக்குப் பிறகு நடக்கும் 2021- ஆம் ஆண்டு வரையில் நடந்த எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டு வரும் ஒரே தலைவராக உள்ளார் தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தற்போதைய காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரான துரைமுருகன். 11 முறை தேர்தல் களம் கண்டுள்ள துரைமுருகன் இரண்டு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். இதில் 9 முறை காட்பாடியிலும், 2 முறை ராணிப்பேட்டையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது 12- வது முறையாக மீண்டும் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

 

துரைமுருகனுக்கு அடுத்தபடியாக, அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் தனபால், அ.தி.மு.க.வில் இருந்து தற்போது தி.மு.க. வேட்பாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அ.தி.மு.க. முதன் முதலில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

 

இதில், கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 2001- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலைத் தவிர்த்து, மற்ற எல்லாத் தேர்தல்களிலும் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். 1996- ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியை ருசித்துள்ளார் கே.ஏ.செங்கோட்டையன்.

 

தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகரான தனபால், அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. முதன் முதலாக ஆட்சி அமைத்த 1977 தேர்தல் தொடங்கி 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011- ஆம் ஆண்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், 2016- ஆம் ஆண்டு அவினாசி சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்ற தனபால், தற்போது மீண்டும் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

 

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் இடம்பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை 10 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் இவர், இரண்டு தேர்தலில் மட்டுமே தோல்வி அடைந்தார். அதிகபட்சமாக சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மட்டும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது