Skip to main content

தையல் கடையிலிருந்து ஒரு தமிழ் பேராசிரியர்...

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

மார்ச் 12 – வரலாற்று ஆய்வாளர் மா.ராசமாணிக்கம்.

 

நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளவேண்டும், யார் சொன்னார், எதற்காக சொன்னார் என ஆராய்ச்சி செய்யக்கூடாது, சந்தேகிக்கூடாது என்கிற கோட்பாட்டில் வாழ்க்கையை தொடங்கியவருக்கு வாழ்க்கையில் வளர்ச்சியே கிடைத்தது. அவர் மறைந்தும் இன்றளவும் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்கள் அவர் எழுதிய நூல்களை தான் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் இயக்கங்களும் அவர் எழுதிய நூலைத்தான் இன்றும் சான்றாக காட்டுக்கிறார்கள் அவது வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ராசமாணிக்கம்.

 

ஆந்திரா மாநிலம் சித்தூரில் வசித்த மாணிக்கம் – தாயம்மாள் தம்பதியின் மகனாக ராஜா பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 7 பேர் ஆனால் பிறந்த சில ஆண்டுகளிலேயே அதில் 5 பேர் இறந்துவிட்டனர். இறுதியில் அந்த தம்பதியரின் மகன்காக வளர்த்தது ராஜாவும், அவரது அண்ணன் இராமகிருஷ்ணனும் தான்.

 

மாணிக்கம் அரசாங்கத்தின் வருவாய்த்துறையில் நில அளவையர் ( சர்வேயர் ) துறையில் அதிகாரியாக பணியில் இருந்ததால் அடிக்கடி இடமாறுதல் செய்யப்பட்டனர். ராஜாவுக்கு 9 வயதாகும்போதே அதாவது 1916ல் அவரது குடும்பம் மதுரைக்கு வந்தது. மதுரை வந்த இரண்டு ஆண்டுகளில் ராஜாவின் தந்தை மாணிக்கம் இறந்துப்போனார். இதனால் குடும்பம் நிலைக்குலைந்தது. வாரிசு அடிப்படையில் மாணிக்கத்தின் வேலை அவரது மகன் இராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவரும் ஊர் ஊராய் பணி மாறுதலில் அனுப்பிக்கொண்டே இருந்தது அரசாங்கம்.

 

maa.rajamanikkanar
 

1921ல் திண்டுக்கல்லில் இயங்கிய கிருஸ்த்துவ மிஷனரி நடத்திய பள்ளியில் சேர்க்கப்பட்டார். தமிழ் வழியில் முறையாக பாடங்களை கற்க துவங்கினார். நன்னிலம், தஞ்சாவூர், திண்டுக்கல் என அடுத்தடுத்து பணி மாறுதல் கிடைக்க அங்கு குடும்பம்மே சென்றது. இதனால் ராஜாவின் படிப்பு பாதிக்கப்பட அவரது அண்ணன் அவரை குடும்ப சூழ்நிலை கருதி தையல் கடையில் காஜா பையனாக வேலைக்கு சேர்த்துவிட்டார்.

 

ராஜாவின் படிப்பு ஆர்வத்தை கண்ட தஞ்சாவூரில் இருந்த தமிழாசிரியர் அவரை படிக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை அவரது அண்ணனிடம் எடுத்துக்கூறி தொடர்ந்து படிக்கவைத்தார். பள்ளி படிப்பு மீண்டும் துவங்கிய சமயத்தில் கரந்தை தமிழ்சங்க முன்னோடிகளான கரந்தை கவியரசு வெங்கடாஜம், உமாமகேஸ்வரன், உ.வே.சா, ராகவையங்கார் போன்றோர் மூலம் தமிழ்ழை நன்றாக கற்றார்.

 

அந்த தமிழ் பத்தாம் பாரம் என்கிற பத்தாம் வகுப்பு மட்டும்ம படித்த ராஜாவுக்கு, தஞ்சாவூர் ஒரத்தநாடு உயர்நிலைப்பள்ளியில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அந்த பணி அவருக்கு பிடிக்கவில்லை. அவரின் தந்தையின் நண்பர் 1928ல் சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கிய தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராக பணி கிடைக்க செய்தார். அந்த பணியில் விரும்பி ஏற்றுக்கொண்டார். அதன்பின் ராஜா என்பது ராசமாணிக்கம்மானது. 1928 முதல் 1936 வரை சுமார் 8 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அங்கு பணியாற்றும்போதே தனது 23வது வயதில் 1930 செப்டம்பர் 9ந்தேதி கண்ணம்மா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்விலும் இணைந்தார்.

 

pallava history book
 

பணியாற்றிய சமயத்திலேயே மாணவர்களுக்கான பாடல்நூல்களை தொகுத்து எழுதினார். நாற்பெரும் வள்ளல்கள், ஹர்சவர்தன், மூவேந்தர், ஆப்பிரகாம்லிங்கம், முசோலினி என பெருந்தலைகள் பற்றிய புத்தகங்களை எழுதினார். அப்போது அவரது கல்வி பள்ளிக்கல்வி மட்டும்மே. ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே படிக்கவும் செய்தார். 1936ல் பட்ட படிப்புகளை படித்து முடித்தார். பணியில் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

 

பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, சிந்துசமவெளி வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி போன்ற நூல்கள் இவர் எழுதினார். தமிழர் திருமண நூல் என்கிற நூலை எழுதினார். அதில் தமிழர் திருமணம் ஆடம்பரமானதல்ல, செலவற்ற திருமணம் தான் ஆதிக்காலம் முதல் தமிழர்கள் செய்து வந்தனர் என ஆய்வு குறிப்புகளோடு எழுதினார். அதோடு, அதில் ஐதீக முறைகளை எதிர்த்தார். திராவிட கழகத்தோடு அவருக்கிருந்த நெருக்கம்மே அவரை வெளிப்படையாக எழுத வைத்தது.

 

Chola
 

1947ல் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1953 வரை அந்த பணியில் இருந்தார். அங்கிருந்து மதுரை தியாகராய கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பதவி உயர்வில் சென்றார். 1959ல் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் இணை பேராசிரியராக பதவி உயர்வில் வந்தவர் சுமார் 8 ஆண்டுகள் அந்த பணியில் இருந்தார்.

 

இவர் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றியபோது சைவசமய வளர்ச்சி, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூல்கள் எழுதப்பட்டன. ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

 

சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது 1967 மே 26ந்தேதி மாரடைப்பால் காலமானார்.

 

இவர் மறைவுக்கு பின் இவரது சேக்கியார், சோழர் வரலாறு உட்பட 20 நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. இவர் வரலாற்று ஆசிரியர் மட்டும்மல்ல சிறந்த புதின எழுத்தாளருமானவார். நாட்டுக்கு நல்லவை, தமிழரசி போன்ற புதினங்களையும் எழுதியுள்ளார் ராசமாணிக்கம்.

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்