Skip to main content

பள்ளியில் மாடியிலிருந்து குதித்த மாணவி! -அமுக்கப்பட்ட அருப்புக்கோட்டை அசம்பாவிதம்!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018


“எல்லா உண்மைகளும் வெளியில் வருவதில்லை. காவல் நிலையங்களும் எல்லா புகார்களையும் பதிவு செய்வதில்லை.  பணபலம் பல கொடுமைகளை வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைத்துவிடுகிறது.” என்று நொந்துபோய்ச் சொன்னார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவா. விசாரணையில் இறங்கினோம். 

 

மறைக்கப்பட்ட விவகாரம் இதுதான்

பொன்விழா கண்ட அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளியில், நர்மதா என்ற 11-ஆம் வகுப்பு மாணவி, தற்கொலை மனநிலையில் மாடியிலிருந்து கீழே குதித்து,  மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இதுகுறித்து, அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவாகவில்லை. மாணவியின் பெற்றோரை பள்ளி நிர்வாகம் சரிக்கட்டி விட்டது.  

 

investigation

 

மாணவி ஏன் தற்கொலைக்கு முயன்றார்?

காலாண்டு வேதியியல் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்களைப் பெற்றாள் நர்மதா. அவள் மீது எரிச்சலான ஆசிரியை, “எல்லா சமுதாயத்தினரும் நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டுமென்றுதான், இந்தப் பள்ளியை நடத்திவரும் சமுதாயம் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறது. இதை உணராத சில சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், படிப்பில் அக்கறை காட்டாமல், குறைந்த மதிப்பெண்கள் பெற்று, பள்ளிக்கும் ஆசிரியருக்கும் கெட்ட பெயர் வாங்கித் தருகிறார்கள்.” என்கிற ரீதியில் பேசியதாகவும், அதனால் மனம் உடைந்த நர்மதா, பள்ளியின் மேல் தளத்திலிருந்து குதித்ததாகவும், சமுதாய ரீதியாக சிலர் குற்றம் சாட்டினர்.

 

மாணவிகள் தரப்பில் ஒருவர் “மார்க் ரொம்ப கம்மியா எடுத்திருந்தாள் நர்மதா. விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்து, ‘நான் நல்லாத்தான் எழுதியிருக்கேன். மார்க் ஏன் குறைச்சு போட்டீங்க? திருப்பிச் சரி பாருங்க.’ என்றாள். அதற்கு ஆசிரியை “மார்க் போட்டது போட்டதுதான்.” என்று கூறினார். அந்தக் கோபத்தில்தான் மாடியிலிருந்து குதித்தாள்.” என்றார். 

 

‘பள்ளி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நர்மதா விஷயத்தில் காவல்துறை மவுனமாகி விட்டதாமே?’ அருப்புக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பாலமுருகனிடம் கேட்டோம். 

 

investigation

 

“யாரும் புகார் தரவில்லை. ஆனாலும், போலீஸ் தரப்பில் விசாரித்தோம். சிகிச்சை பெற்றுவரும் நர்மதா ‘நானே வழுக்கி விழுந்துட்டேன்.’ என்று  சொன்னாள். சிசிடிவி ஃபுட்டேஜும் அவள் சொல்வது போலவே இருந்தது. இது தற்கொலை முயற்சி கிடையாது.” என்று ஒரே போடாகப் போட்டார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தங்கரதியிடம் பேசினோம். 

 

 

“கெமிஸ்ட்ரில 70-க்கு நர்மதா வாங்கிய மார்க் வெறும் 8½ தான். தன் கைக்கு வந்த விடைத்தாளில் மார்க்கைப் பார்த்த நர்மதா,   ஒரு இடத்தில் திருத்திவிட்டு, ஆசிரியையிடம் கொடுத்து மார்க் போடச் சொல்லியிருக்கிறாள். ஆசிரியை புதியவர் என்பதால், அவள் திருத்தியதை அறியாமல்,  கூடுதலாக 2 மார்க் போட்டு, 10 ½ மார்க் ஆக்கியிருக்கிறார். மீண்டும் விடைத்தாளில் திருத்தம் செய்த அவள், கூடுதலாக மார்க் போடச் சொல்லியிருக்கிறாள். அப்போது சக மாணவிகள், ‘டீச்சர்.. உங்களுக்குத் தெரியாம பேப்பர்ல இவ திருத்திட்டு, திரும்பத் திரும்ப மார்க் கேட்கிறாள்.’ என்று உண்மையைச் சொல்லியிருக்கின்றனர். உடனே அந்த ஆசிரியை, ‘வாம்மா.. தலைமை ஆசிரியை அறைக்குப் போவோம்.’ என்று நர்மதாவை அழைத்திருக்கிறார். ஆசிரியை முன்னே செல்ல, பின்னால் வந்த நர்மதா, மாடியின் கைபிடிச்சுவரில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். ஆசிரியை தடுக்க முயன்றும், கீழே குதித்திருக்கிறாள். உண்மையிலேயே நடந்தது இதுதான்.” என்று விளக்கம் தந்தார். 

 

investigation

 

தங்கரதியின் கணவர் ஆனந்தராஜ் அதே நிர்வாகம் நடத்துகின்ற ஆண்கள் மேல்நிலைப்பளியின் தலைமை ஆசிரியர் ஆவார். அவர் நம்மிடம் “மாணவர்களுக்குப் பயப்பட வேண்டிய நிலையில் ஆசிரியர் சமுதாயம் இருக்கிறது. பள்ளியில் காலையிலிருந்து மாலை வரையிலும் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதுதான், ஆசிரியர் சமுதாயத்தின் பெரும் கவலையாக உள்ளது. இப்படியே, பயந்து பயந்து ஆசிரியர் வேலை பார்த்தால், மாணவ சமுதாயத்தை எப்படி திருத்த முடியும்? அதனால்,  அடுத்த தலைமுறையின் வளர்ச்சி என்பது கேள்விக்குறி ஆகிவிட்டது.” என்று வேதனைப்பட்டார்.   

 

investigation

 

மாணவர்கள் நலனில் ஆசிரியருக்குக் கவலை! பள்ளி நிர்வாகத்துக்கு,  நடந்த அசம்பாவிதம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்ற கவலை! பள்ளி நிர்வாகிகளின் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பது காக்கிகளின் கவலை! மதிப்பெண் போன்ற விஷயங்களுக்காக உயிரைவிடத் துணியலாமா என்பது பெற்றோரின் கவலை! மாணவர்களில் சிலருக்கோ, படிப்பதும், தேர்வு எழுதுவதும், மதிப்பெண்கள் பெறுவதும், தவறைச் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் வழிநடத்துவதும் பெரும் கவலையாக இருக்கிறது. 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.