Skip to main content

அப்போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் - சகாயம் ஐஏஎஸ்

Published on 13/03/2018 | Edited on 13/03/2018

நடிகர் ஆரி நடத்திய 'மாறுவோம் மாற்றுவோம்'  என்ற வேளாண்மை முக்கியத்துவத்தை சொல்லும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த பிரபலங்களில் ஒருவராக ஐஏஎஸ் அதிகாரி சகாயமும் கலந்து கொண்டு உரையாற்றினார். தன் உரையாடலில் வேளாண்மையின் முக்கியத்துவமும் விவசாயிகளை பற்றியும் பெருமிதமாக பேசியிருக்கிறார்.
 

sagayam


நான் ஐஏஎஸ் தேர்வில் வென்று பின்னர் டெல்லியில் பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது அங்குள்ள சகமானவர்கள் அவர்களை பற்றியும் அவர்களின் பெற்றோர்களை பற்றியும் அவர்களது பின்னணி பற்றியும் கேட்பார்கள். ஒவ்வொருவரும் அவர்களது அப்பா என்ஜினீயர், டாக்டர், பிசினஸ் மேன் என்று இறுமாப்போடு சொல்வார்கர்கள். என்னிடம் உங்களின் பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்று கேட்கும்போது, "பெருமை வாய்ந்த விவசாயி, மக்களுக்கு சோறுபோடுபவரின் பெருமை வாய்ந்த மகன்"  என்று பெருமையாக கூறுவேன். அவர்கள் இறுமாப்பாய் அவர்களது பெற்றோர்களை பற்றி கூறியதை விட, நான் கூடுதலான இறுமாப்புடன் கூறுவேன். இன்னொரு விஷயம், எனது மணி பர்ஸில் மாதக்கடைசி என்றால் பணம் குறைந்துக்கொண்டே இருக்கும். ஆனால் எனது பர்சில் ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் குறையாது. அது என்னவென்றால், என்  ஊரில் இருக்கும் என் சொந்த விவசாய நிலத்தின் பிடிமண். அந்த பிடிமண் நான் எங்கு போனாலும் உடன் இருக்கும், இதன் மூலம் நான் நிலம் அதன் உணர்வு உடன் இருப்பது போன்ற ஒரு மகிழ்வு ஏற்படும். ஆதலால் அதனை என்னுடனே வைத்திருப்பேன். 
 

தேர்தல் பணிக்காக நான் உத்திர பிரேதச மாநிலம் சென்றபோது கங்கைக்கரை ஓரத்தினிலே வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, உடையார் எனப்படும் ராஜராஜசோழனின் பெருமையையும், காவேரி கரையின் பெருமையும் கூறும் நாவல். அந்த நாவலை படித்துக்கொண்டிருப்பேன். கங்கைக்கரையில் இருந்தாலும் கூட என் நினைப்பு முழுவதும் காவேரி கரையை சார்ந்துதான் இருக்கும். உலகம் போற்றும் சாம்ராஜ்யத்தில் ஒன்றாக ராஜேந்திர சோழனின் சாம்ராஜ்யம்  இருந்திருக்கிறது. கிபி 500 ஆண்டில் கப்பல்படைகளை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் அவர்கள் கைவசம் கொண்டுவந்தார்கள். பின்னர் ஏன் கிபி 1000 ஆண்டுக்கு முன்னரே பெரும் கப்பற்படையை வைத்திருந்த ராஜேந்திர சோழனால் வெறும் பர்மாவையும், வியட்னாமையும் மட்டும் பிடித்து அதில் அவரின் புலிக்கொடியை நடாமல் விட்டுவிட்டனர். ஏனனெனில் ராஜேந்திர சோழனின் படை வேளாண்மையை முதன்மையாக செய்தவர்கள். ஆனால், ஆங்கிலேய படையோ வணிகம் மற்றும் அல்லாமல் சூது, சூழ்ச்சி மற்றும் மோசடியை ஆகியவற்றையும் செய்தனர். இதுதான் காரணம், ராஜேந்திர சோழன் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்காததற்கு. "விவசாயம் என்பது அறத்தை போற்றுவது. ஆகையால் அத்தகைய விவசாயத்தை நாம் போற்றுவோம். வாய்ப்பு கிடைக்கும்போது விவசாயிகளுக்கு உதவுங்கள், நாங்களும் கலப்பை என்ற ஒரு திட்டத்தை வைத்து  விவசாயிகளுக்கு உதவி செய்துகொண்டு வருகிறோம்".   
 

"இந்தியாவின் வல்லரசு பாதை விண்வெளியில் இருக்கிறது என்று சொல்பவர்கள் எல்லாம் மோசடியாளர்கள், இந்தியாவின் வல்லரசு பாதை விவசாய நிலங்களில் தான் இருக்கிறது". அமீர் ஊருக்கு வாருங்கள் என அழைப்பதுபோல் அரசியலுக்கு அரசியலுக்கு வாருங்கள் என அழைக்கிறார். ஊழலை நான் எப்போது எதிர்த்தேனோ அப்போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்". நான் ஐஏஎஸ் அலுவலராக பணியாற்றியபோதே பல இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருகின்றேன். பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை தடை செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு தற்போதுதான் ஏற்பட்டு வருகிறது. ஆனால், அதை நான் 2000 ஆண்டின் தொடக்கத்திலேயே எட்டு பூட்டு போட்டு சீல் வைத்து  நிறைவேற்றினேன். அதன்பின் பல கஷ்டங்களை அனுபவித்தேன். இதுவரை மொத்தம் 26 முறை பணிமாறுதல்கள் பெற்றிருக்கிறேன், என் மனைவி என்னுடனே 20 இடங்களுக்கு மாறிருக்கிறார். இது  எங்களுக்கு பழகிவிட்டது.

"அனைவரும் விவசாயத்திற்காக உதவுங்கள்" எனக்கூறி அவர் உரையை முடித்துக்கொண்டார்.

Next Story

'சகாயம் உடல்நிலை நன்றாக உள்ளது' - மருத்துவமனை தகவல்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

sagayam ias coronavirus positive chennai government hospital

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் கரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் 'சகாயம் அரசியல் பேரவை' என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். இந்த அமைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும் சகாயம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாயத்திற்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து 8- வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

சகாயம் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் டீன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ். உடல்நிலை நன்றாக உள்ளது. மீண்டும் பரிசோதனை செய்து கரோனா இல்லை எனத் தெரியவந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

"தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை"- சகாயம் வேதனை!

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

sagayam ias pressmeet at chennai

 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் பாதை அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், "புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் நம்பிக்கை இல்லாததே விவசாயிகள் போராட காரணம். தேர்தல் நேரத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை. நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு மக்கள் பிரதிநிதிகளை இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.