Skip to main content

ஆர்.எஸ்.எஸ், குற்றவாளி, தற்போது இரண்டாம் முறையாக முதல்வர்....

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

பி.எஸ் எடியூரப்பா  தொடக்க காலங்களிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து அதில் ஒரு பெரும் பதவியை பிடித்தவர். 1980 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தாலூகாவின் பாஜக தலைவராகினார். 1985 ஆம் ஆண்டு ஷிமோகாரா மாவட்டத்தின் பாஜக தலைவராகினார். 1988 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் தலைவராகினார். 1994 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்கட்சித்தலைவராக இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார், இருந்தாலும் பாஜக தலைமை அவருக்கு எம்எல்சி பதவியை அளித்தது.  2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியினால் எதிர் கட்சி தலைவராக இருந்தார்.
 

yeddy

 

 

முதன்முதலில் கர்நாடக அரசியலில் இவரது பலத்தை காட்டியது, குமாரசாமி தலைமையில் மக்கள் ஜனதா தள அமைச்சர்கள் காங்கிரசுடன் இருந்த கூட்டணியை தவிர்த்துவிட்டு வெளியேறினர். ஆட்சி குழப்பம் ஏற்பட்டது. அப்போதுதான் எடியூரப்பாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார் குமாரசாமி. இரண்டு வருடத்தில் இவர்கள் கையில் ஆட்சி அமைக்கப்பட்டது. குமாரசாமிக்கு மட்டும் முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படாமல், இருவருக்கும் 20 மாதங்கள் என்று எடியூரப்பா தரப்பில் பேசப்பட்டது. அக்ரிமெண்டும் போடப்பட்டது. முதல் இருபது மாதங்கள் குமாரசாமிக்கும் அடுத்த இருபது மாதங்கள் எடியூரப்பாவுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் இருபது மாதங்கள் நன்றாக ஆட்சியமைத்துவிட்டு குமாரசாமி முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு தர மறுத்தார். எடியூரப்பா கொஞ்சமும் சிரமம் இல்லாமல், இவர்களுடன் இருந்த ஆதரவை முறித்துக்கொண்டு விலகினார். இரண்டு மாதங்கள் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி வந்து அவர்களை நோகடித்தது.
 

 

yeddy with kumarasamy

 

 


பின்னர், எடியூரப்பாவையே 2007 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு வந்தது, பதவியேற்றார். 2008 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவை எதிர்த்து போட்டியிட்டார். பங்காரப்பாவுக்கு எல்லா தரப்பு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது. அப்படி இருந்தபோதும் எடியூரப்பா 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டின் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிருந்துதான் இவரின் அரசியல் கெடுபிடி காலங்கள் ஏற்படத் தொடங்கின, பெங்களூர் மற்றும் ஷிமோகா போன்ற ஊர்களில் பல நில மோசடிகளும், சட்டவிரோதமான இரும்பு கம்பிகள் ஏற்றுமதி, சுரங்க ஊழல் போன்ற பல வழக்குகள் இவர்மேல் கர்நாடக லோக்ஆயுத் கமிஷன் முன் வைத்தனர். பாஜக மேலிடத்தில் இருந்து இவரை விலக சொல்லி அழுத்தம் அதிகரித்தது. முதலில் ராஜினாமா செய்யப்பட்டார் பின்னர் கட்சியைவிட்டு விலகினார். 15 அக்டோபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். 23 நாட்கள் சிறைவாசம் கழித்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் 2012 ஆம் ஆண்டு கர்நாடகா ஜனதா பக்ஷா என்ற கட்சியை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுடன் அவர் இணைந்தார், கட்சியையும் சேர்த்துதான். 2015 ஆம் ஆண்டு ஆளுநர் வஜூபாய் வாலாவால் மீண்டும் இவரது வழக்குகள் சரி பார்க்கப்பட்டு, பழைய வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  2016 ஆம் ஆண்டு கர்நாடக பாஜகவின் தலைவராகினார்.
 

yeddy with modi

 

 


2018 ஆம் ஆண்டு, இந்த சர்ச்சையான சூழலில் அவசர அவசரமாக கர்நாடக முதல்வராக பதவிப்பிரமாணம், ஆளுநர் தலைமையில் எடுத்துக்கொண்டார். உடனடியாக ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்து என்று முழு முதல்வரைப்போல அறிவித்துவிட்டார். இன்னும் 15 நாட்களே இருக்கிறது பெருபான்மையை நிரூபிக்க. அதற்குள் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் பாஜகவை எதிர்த்து நியாயம் கேட்க வெற்றி நடைபோட உள்ளனர் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.