Skip to main content

அடேங்கப்பா… முஸ்லிம் பெண்கள் மீது மோடிக்கு என்னா அக்கறை..!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
praveen togadia


 

ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூட்டத்தினர் ஒருத்தருக்கொருத்தர் திட்டிக் கொண்டாலும்கூட அது யாரோ ஒருத்தரின் லாபத்துக்காத்தான் இருக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

இப்போது, விஎச்பி என்ற சாமியார்கள் அணியின் தலைவர் பிரவீன் தொகாடியா அவர் பாணியில் மோடியை திட்டுவதுபோல முஸ்லிம்களின் நண்பர்கள் போல மாற்றப் பார்க்கிறார்.


அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்துசெய்யவும்தான் மோடிக்கு வாக்களித்தார்களாம். ஆனால், அவர், முஸ்லிம்களின் மனைவியருக்கு வக்கீலாக மாறிவிட்டார் என்று தொகாடியா பேசியிருக்கிறார்.


அதாவது ராமர் கோவிலையும் 370 ஆவது சட்டப்பிரிவையும் மோடி மறந்துவிட்டு முஸ்லிம்களுக்கு நண்பராகிவிட்டதுபோன்ற தோற்றத்தை தொகாடியா ஏற்படுத்துகிறார். இதன்மூலம் முஸ்லிம்கள் மத்தியில் மோடியை இந்துவிரோதி என்றும், இஸ்லாமியர்களின் நண்பர் என்றும் சித்தரிக்க அவர் முயற்சிக்கிறார்.


முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மோடி அரசின் நரித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கின்றன. பாஜக அரசு தனக்காகவே சில இஸ்லாமிய பெண்களை தூண்டிவிட்டு முத்தலாக் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பாஜக அரசு முயற்சிப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்துள்ளன.


தலாக் விவகாரத்தில் உள்ள குறைபாடுகளை இஸ்லாமிய சட்டவாரியம் சரிசெய்ய ஒப்புக்கொண்ட பிறகும் அதுதொடர்பான, இஸ்லாமியர்களின் உரிமைகளில் தலையிடும் வகையிலான சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிப்பது மோடி அரசின் மோசடி வேலை என்று இஸ்லாமிய அமைப்புகள் சாடியுள்ளன.


இந்த நிலையில், இஸ்லாமிய பெண்களின் வக்கீலாக மோடி மாறி, அவர்களுடைய நலனுக்காக பாடுபடுகிறார் என்று தொகாடியா கூறியிருப்பது மிகப்பெரிய நாடகம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.