Skip to main content

மனைவி பொருளாளர்: தான் செயலாளர்: கட்சி ஆரம்பித்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை.?

Published on 18/04/2018 | Edited on 18/04/2018



 

    சமீபத்தில் "என் பின்னணியில் அரசியல் கட்சியா..? என என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை நக்கீரனுக்கு பிரத்யேகமாய் பேட்டியினைக் கொடுத்தவர், பேட்டியின் இறுதியில், " நல்லவர்கள் இயங்கும் கட்சிக்கு நானும் வரலாமோ.? என்ற எண்ணமும் இருக்கின்றது.!" என முடித்திருந்தார். அது தான் உண்மையென்றாகியுள்ளது இப்பொழுது..! 
 

   முன்னதாக மார்ச் 10ம் தேதியான சனிக்கிழமையன்று ராமநாதபுரம் அரண்மனை வாசலில் சுமார் மூன்றாயிரத்திற்கும் அதிகமான மகளிரைக் கொண்டு சமுதாய விழிப்புணர்வு நாடகம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள், தப்பாட்டம் என மகளிர் தினத்தை தாமதமாகக் கொண்டாடிய "தமிழக மக்கள் நல சங்கம்" எனும் அமைப்பு "தமிழக மக்கள் எழுச்சிக் கழகமாக" கட்சியாக இயங்கப் போவதாக அறிவித்திருந்தது. இதன் பின்னனியில் தான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டும், ராமநாதபுர மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யான வெள்ளைத்துரை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது உளவு வட்டாரங்களில். இந் நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரிச்சாலையில் அமைந்துள்ள இவர்களது கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான இணையதளத்தினை (www.tmek.org ) திறந்து வைத்தார் கட்சியின் மாநிலத்தலைவரான அமுதா சுரேஷ். அந்த இணையத்தளம் தான் இவர் தான் பின்னனியில் இருக்கிறார் என ஏ.டி.எஸ்.பி.வெள்ளைத்துரையினை அடையாளம் காண்பித்தது. 
 

     கட்சிக்கான இணையத்தளத்தில் கட்சியின் தலைவராக அமுதா சுரேஷூம், மாநிலப் பொருளார் ராணி வெள்ளத்துரையும் உள்ளிட்டதோடு மட்டுமில்லாமல், செயலாளர் பெயரை உள்ளிடாமல், அவரை அடையாளப்படுத்த DR........M.A.,M.Ed,MPhil,Phd, P.G (FS) என ஏ.டி.எஸ்.பி.வெள்ளைத்துரையின் கல்வித்தகுதியினை பதிவு செய்துள்ளார்கள். இதில் பொருளாளரான ராணி ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரையின் மனைவி என்கிறது அது. இதன் மூலம் காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும், " எப்படி அரசுப்பணியில் இருப்பவர் கட்சியில் இருக்கலாம்..?" என்ற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

 

Next Story

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தூத்துக்குடி எஸ்.பி., சென்னைக்கு மாற்றம்..!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021
Encounter Specialist Thoothukudi SP, Change to Chennai

 

என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. ‘ஜெ’ காலத்தின்போது ஐ.ஜி. விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கப் பணியில் அமர்த்தப்பட்டவர். அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர் வெள்ளத்துரை.

 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததில் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் வெள்ளத்துரை. இவரது மனைவிதான் ராணி ரஞ்சிதம். எம்.ஏ., எம்.ஃபில். படித்த திருச்சி பெரியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்றவர். 

 

Encounter Specialist Thoothukudi SP, Change to Chennai

 

சகஜமாகப் பேசும் சுபாவம் கொண்ட ராணிரஞ்சிதம் அணுகுமுறையிலும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. தி.மு.க.வின் மா.செ. ஆவுடையப்பன், அ.தி.மு.க.வின் இசக்கிசுப்பையா ஆகிய இரு அரசியல் ஜாம்பவான்கள் மோதுகிற அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராகக் களம் காண்கிறார் ராணி ரஞ்சிதம். தொகுதியின் பெண் வேட்பாளர் என்பதால் அ.ம.மு.க.வின் ஈர்ப்புத் தன்மை கூடும் என்பது கணக்காம்.

 

அவரது கணவரான என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை, நெல்லை மாநகரின் குற்ற ஆவணக்காப்பகக் கூடுதல் போலீஸ் துணை கமிஷ்னராக பணிபுரிந்து வருகிறார். தேர்தல் பணிக்கு சம்பந்தமில்லாதவர் என்ற போதிலும் மாநகர போலீஸ் அதிகாரியின் அறிக்கையின்படி வெள்ளத்துரையின் மனைவி தேர்தலில் வேட்பாளர் என்பதால் தேர்தல் அல்லாத பணியான சென்னை தலைமையிட போலீஸ் அலுவலகத்திற்கு போலீஸ் தலைமையின் உத்தரவுப்படி மாற்றப்பட்டிருக்கிறார் என அத்தொகுதியில் பரபவலாக பேசப்பட்டுவருகிறது.