Skip to main content

ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் அத்துமீறல் - மதுரை பள்ளி பயங்கரம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

சில குற்றங்கள், சட்டத்தின் பார்வையில் அது பெரிய குற்றமாகவே இருந்தாலும், சமூகச் சூழல்களால் வெளிப்படாமல் மறைக்கப்படுகிறது. அப்படி ஒரு குற்றச்செயலில் மதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் சிக்காமல், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு மட்டும் ஆளாகியிருக்கிறார்.

 

யார் அந்த ஆசிரியர்? என்ன நடந்தது?

 

மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை நடத்துபவரின் மகனான விஜய், ஆரப்பாளையத்தில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கரோனா லாக்டவுன் நேரத்தில் இவர், அந்தப் பள்ளியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவியைப் பள்ளிக்கு வரவழைத்து, காரில் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்த மாணவிக்கு ஆபாசப் படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வந்ததை, அவருடைய அக்கா தனது கணினியில் உள்ள செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றோரிடம் தெரிவிக்க, மாணவி சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை ஆதாரமாக இணைத்து, கடந்த 28-7-2020 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யரிடம் புகார் அளித்தனர்.

 

பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினருக்கு ஆசிரியர் விஜய்யிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக பேசி முடிக்கப்பட்ட நிலையில், 29-7-2020 அன்று மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து போல நடத்தப்பட்ட அந்த விசாரணையின்போது, மாணவி தரப்பிடம் உள்ள ஆதாரங்கள் பறிக்கப்பட்டு, பெயரளவுக்கு ஆசிரியர் மீதான நடவடிக்கையாக, 30-7-2020 அன்று விஜய்யிடம், செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளிக்குப் பணியிடமாறுதல் உத்தரவு (ந.க.எண் ஆ4/015663/18) வழங்கினர்.

 

ஆசிரியர் விஜய்யை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், கண்துடைப்பாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்... 4-8-2020 அன்று விஜய் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை (தர்ஸ்ரீ.சர்.ஆ4/009179/2020) தயாரித்தபோது, முதலில் ‘மாணவியை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்’ என்று உறுதிபடக் கூறிவிட்டு, பிறகு அதை அழித்துவிட்டு ‘பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்’எனத் திருத்தியுள்ளனர்.

 

dddd

 

மாணவி தரப்பிடம் வெற்றுத்தாள்களில் கையொப்பம் பெற்றும், கல்வி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேரம் நடத்தியும், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் வாங்கிக் கொடுத்தும், மீடியேட்டராக இருந்து விவகாரத்தைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தாராம், ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர். மூன்று வாட்ஸ்-ஆப் குழுக்களை ஆரம்பித்து, அதில் பள்ளி மாணவிகளை இணைத்து, ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், ஆபாசப் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பாலியல் வீடியோக்களை அனுப்பி வந்திருக்கிறார் விஜய். அவருடைய 10 வருட ஆசிரியர் பணியில், எத்தனை மாணவிகள் சீரழிக்கப்பட்டனரோ?

 

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நம்மிடம் மறுத்துப் பேசினார் ஆசிரியர் விஜய், "மூன்று தடவை விசாரணை நடத்தியிருக்காங்க. அஃபிசியலா எல்லாம் முடிஞ்சிருச்சு. ஏதாவது ரிப்போர்ட் வேணும்னா.. சி.இ.ஓ. ஆஃபீஸில் கேட்டுக்கங்க. நான் அந்த மாதிரி எதுவும் பண்ணல. உள்ளூர் ஸ்கூல்ல கரோனா நிவாரணத்துக்கு நான் அதிக நிதி கலெக்ட் பண்ணுனதுனால, பொறாமைல இருக்கவங்க பண்ணுன கம்ப்ளைண்ட்'' என்றார் படபடப்புடன்.

 

மதுரை, பொன்னகரத்தில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யரை சந்தித்தோம். “போன மார்ச்ல எக்ஸாம் முடிஞ்ச பிறகுதான் கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க. பேரண்ட் கம்ப்ளைண்ட் கைக்கு வந்ததும், விஜய்க்கு ஃபோன் பண்ணுனோம். அவர் அட்டெண்ட் பண்ணல. மறுநாளே அந்தப் புகாரை சி.இ.ஓ.க்கு அனுப்பிட்டேன். பெற்றோர் தரப்பில், நடந்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கொடுத்து, விஜய்யை டிரான்ஸ்பர் பண்ணனும்னு சொன்னாங்க. மொதல்ல டிரான்ஸ்பர் ஆகி.. இப்ப சஸ்பெண்ட்ல இருக்காரு. ஸ்கூலுக்கு உள்ளே தப்பு எதுவும் நடக்கல. எல்லாமே ஆன்லைன்ல நடந்திருக்கு'' என்றார்.

 

மதுரை, செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். "எங்க ஸ்கூல்ல விஜய் சேர்ந்து ரெண்டு நாள்கூட இருக்காது. ஏதோ பிளான் பண்ணி சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துட்டாங்க. அந்த ஆர்டர்ல விபரம் எதுவும் குறிப்பிடல'' என்றார்.

 

மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயாவை தொடர்புகொண்டோம். "எந்த விஷயத்தையும் மூடி மறைக்கல. ஒரு கமிட்டி போட்டு விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. கோவிட் பீரியட்ங்கிறதால உடனே ஆக்ஷன் எடுக்க முடியல. அதனால, மொதல்ல டிரான்ஸ்பர் கொடுத்திட்டு, அப்புறம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். இன்னும் முழுமையா விசாரணை நடந்து முடியல. அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததா சொல்லுறது பொய். பணம் வாங்கியிருந்தால் சஸ்பெண்ட் பண்ணியிருப்போமா?'' என்று கேட்டார்.

 

"பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்'' என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள்.

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.