Skip to main content

ஊர்ச்சுற்றியே 1கோடியே 70லட்சம் சம்பாதிக்கும் நபர்!!!

Published on 31/07/2018 | Edited on 01/08/2018

 

nas

 

மெஷினாக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், புதிதாக ஏதேனும் ஒரு ஊரைச் சுற்றி பார்த்திட மாட்டோமா என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது. என்னதான் ஆசை இருந்தாலும் அது பெரும்பாலும் கனவாகவே முடிந்துவிடுகிறது சிலருக்கு. கனவை நினைவாக்க முயன்ற வரையில் உழைத்து, கடைசியில் அழுத்து ஓய்ந்துவிடுவதும் வழக்கமாகிறது. இப்படியெல்லாம் இல்லாமல் ஒருவரின் வேலையே ஊர் ஊராகச்சுற்றி, அந்த ஊரின் கலாச்சாரம், பழக்கவழக்கம், ஊரைப் பற்றிய தன்னுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும், சமூக வலைதளத்தில் நாஸ் டெய்லி என்று அறியப்பட்டவரின் வேலையே இதுதான். நாடு நாடாகச் சென்று அங்கிருக்கும் பழக்கவழக்கம், கலாச்சாரம், பார்ப்பவர்களுக்கு புதிதாக அல்லது அரிதாக இருப்பதை தன்னுடைய வீடியோவில் பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் இவரின் வேலை. 

 

 

நுஸீர் யாஷின், இஸ்ரேலில் உள்ள விவசாய நகரமான அரபாவில் வளர்ந்த மிடில் கிளாஸ் குடும்பக்காரர். இவரது அம்மா ஆசிரியர், அப்பா உளவியலாளர். நான்கு பிள்ளைகளில் இவர் நடுபிள்ளை. தன்னுடைய 19 வயதில் ஏதேனும் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர், ஹார்வேர்டு பல்கலைக்கழத்தில் அப்ளிகேஷன் போட்டு, பின்னர் அங்கேயே படித்தார். படித்து முடித்ததும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலேயே நல்ல வேலை வருடத்திற்கு நூறாயிரம் டாலர் சம்பளம் பெறுகிறார். வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது, அவருக்கு தான் ஒரு மெஷினோ என்கிற எண்ணம் தோணுகிறது, அலுப்பு தட்டுகிறது. அவர் இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். ஒருவருடம் வேலை பார்த்து தன்னுடைய சம்பளப்பணத்தில் பாதிக்கு மேல் 60,000 டாலர் சேர்த்துவைத்து 2016ஆம் ஆண்டு வேலையிலிருந்து விடுபடுகிறார். வேலையை விட்டவுடன் சேர்த்துவைத்த பணத்திலிருந்து கேமரா, விமான டிக்கெட் வாங்குகிறார். முழுநேரமாக உலகைச் சுற்ற திட்டமிடுகிறார் நுஸீர் யாஷின் என்கிற நாஸ் டெய்லி. 

 

nas director

 

அரேபிய மொழியில் நாஸ் என்றால் மக்கள். இவர் பேஸ்புக்கில் நாஸ் டெய்லி என்கிற பக்கத்தை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடத்திற்கு ஏதாவது ஒரு இடத்தின் சிறப்பம்சங்களைப்பற்றி வீடியோ பதிவிடுவது, அதுவும் ஆயிரம் நாட்களுக்கு என்று நோக்கத்தை திட்டமிடுகிறார். முதல் பயணமாக நைஜீரியாவுக்கு பயணித்தார், பின்னர் ஒவ்வொரு நாடாக பயணிக்க ரஷ்ய ஊடகம் ஒன்று இவரை நாடி, இவருடைய கண்டண்டிற்கு மாதம் 3000 டாலர் என்று விலை பேசியது. மேலும், இதனை வைத்து சில விஷயங்களை முடிந்தளவிற்கு வியாபாரமாக்கினார். இந்த வீடியோ பதிவிடுவதன் மூலம் இவர் 250,000 டாலர்(இந்திய மதிப்பில் 1கோடியே 70லட்சம்) சம்பாதிக்கிறார். "இது மற்ற டிராவல் டாக்குமெண்டரி வீடியோக்கள் மூலம் சம்பாதிப்பவர்களை விட குறைவே, ஆனால் பிடித்திருக்கிறது" என்கிறார் நாஸ். தற்போது இவரின் பேஸ்புக் பக்கத்தை 7.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். பல மில்லியன் பார்வையாளர்கள் இவர் தினசரி போடும் ஒரு நிமிட வீடியோவுக்காக காத்திருக்கிறார்கள். இவரின் வீடியோக்கள் எல்லோரையும் கவர்வதற்கு முக்கிய காரணம், யாரும் செல்லாத நாடுகளுக்கு செல்வதும், புதிதான விஷயங்களைப்பற்றி அதில் குறிப்பிடுவதும் தான். வீடியோ ஒரு நிமிடம் என்பது இன்னுமொரு முக்கிய காரணம். இந்த வேகமாக ஓடும் காலத்தில் டி20 கிரிக்கெட்தான் சக்கைபோடு போடுகிறது என்பதை நாஸ் டெய்லி புரிந்துகொண்டார் போல.

 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.