Skip to main content

"நானா போய் கேட்கமாட்டேன், வருவதை விடமாட்டேன்" - நடிகர் நாஞ்சில் சம்பத்     

Published on 23/02/2019 | Edited on 25/02/2019

 

அரசியல் மேடைகளிலும் இலக்கிய மேடைகளிலும் ஓங்கி ஒலித்த, சங்க இலக்கியத்தையும் சரித்திர கதைகளையும் வரி மறக்காமல் பேசிய நாஞ்சில் சம்பத்தின் குரல் முதல்முறையாக திரையில் ஒலிக்கிறது. அரசியலில் இருந்த பொழுதே மீம்ஸ் உலகம் மெல்ல அவரை தத்தெடுத்தது. ஒரு பக்கம் தன் தமிழுக்காக அரசியல் வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்த நாஞ்சில் சம்பத் மற்றொரு பக்கம் இணைய இளைஞர்களிடையே புகழ் பெற்றார். தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தற்போது எல்.கே.ஜி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்துள்ளார். நடிகர் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்... 

 

nanjil sampath


 

பொதுவாக சினிமாவில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருவார்கள். அரசியலில் இருந்துவிட்டு நடிக்கச் சென்றது எப்படி உள்ளது?
 

என் கையில் ஏதாவது பொறுப்பை தந்தால் அதனை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பேன். கட்சி, அரசியலில் இருந்து விலகி வேலையில்லாமல், வருமானத்துக்கு வழியில்லாமல் இருந்த நேரத்தில் ஆர்.ஜே.பாலாஜி என்னை கூப்பிட்டார். வருகிறேன் என்று சொன்னேன். எல்லோரும் இன்று என் நடிப்பை நன்றாக உள்ளது என்று பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 

தொடர்ந்து நடிப்பீர்களா?
 

திரைத்துறையில் தொடர்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.
 

மேலும் படங்களில் நடிக்க முயற்சி செய்கிறீர்களா?
 

யாரிடமும் நான் நடிக்க வாய்ப்பு கேட்க மாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக்கொள்வேன்.
 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப்போட்டியிடும் என்று அறிவித்தார் ஜெயலலிதா. இப்போது அதிமுக தலைவர்கள் பாமக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே?
 

தற்கொலைக்கு சமம் இன்று அதிமுக எடுத்திருக்கிற முடிவு. மாநில உரிமைகளுக்கு வாளாகவும், கேடயமாகவும் இருந்த கட்சி தங்களது உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்திருக்கிறது. தன்னுடைய உரிமைப்பாட்டை இழந்து நிற்கிறது. டெல்லியில் இருப்பவர்களின் கண் அசைவுக்கு புரிந்துகொண்டு அவர்களது கட்டளைக்கு அடிபணிந்து நிர்கிறார்கள். 40 இடங்களில் தன்னந்தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்ற ஒரு கட்சி, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிக்கொண்டிருப்பது வேதனையை தருகிறது.
 

இரு திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறிய ராமதாஸ், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளாரே?
 

ராமதாஸ்க்கு தேவை மகனுக்குப் பதவி, பணம். அது எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வார். அவர்களுக்குக் கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. பொதுவாழ்வில் ராமதாஸ் அளவுக்கு குட்டிக்கரணம் போட்டவர்கள் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது.
 

மக்கள் நலன் சார்ந்து 10 கோரிக்கைகளை முன் வைத்துதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
 

அப்படித்தான் சொல்லுவார். மகனுக்கு மந்திரி பதவி வாங்கும்வரை அப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்.
 

திமுக தலைமையிலான கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?
 

திமுக கூட்டணி வெற்றிப்பெற வேண்டும். வெற்றிப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர்களை வெற்றிப்பெற வைப்பது தமிழர்களின் கடமை.
 

திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. வைகோவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா?
 

வாய்ப்பு அளித்தால் வைகோவுக்காக பிரச்சாரம் செய்வேன்.
 

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பொதுக்கூட்டங்களில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

கமலுடைய பிரச்சாரம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பு பலம் கமலுடைய கட்சிக்கு இல்லை. அதுதான் பலவீனம்.


 

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.