Skip to main content

5 கோடி டூ 28.45 டிரில்லியன்... எத்தனை வந்தாலும் எல்.ஐ.சி போல் வருமா?

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

சென்னையின் முதல் கட்டுமான அடையாளம், அன்றைய மவுண்ட் ரோடு, இன்றைய அண்ணா சாலை. இந்தச் சாலையில் 14 தளங்களுடன் இன்றும் பிரமிப்பாக பார்க்கப்படும் கட்டிடம் என்றால் அது எல்.ஐ.சி தான். எல்.ஐ.சியின் தலைமையிடம் மும்பையில் உள்ளது. 1956-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி  இந்நிறுவனம் துவங்கப்பட்டு இன்றுடன் 62 ஆண்டுகள் முடிந்து, தனது 63-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதன் மொத்த சேவை தரத்தையும், அதன் பங்களிப்பும் மற்றும் அதன் வளர்ச்சியையும் பார்ப்பதற்கு முன்பாக, நமது சென்னை நகரத்தில் அதன் அடையாளமாகவும், அதன் மூலம் அண்ணா சாலை கொண்டுள்ள அழகையும் சற்று திரும்பி பார்ப்போம். 

 

LIC

 

அன்று முதல் இன்று வரை நாம் அண்ணார்ந்து பார்க்கும் எல்.ஐ.சி கட்டிடம் இருக்கும் இடத்தில் அதற்கு முன்பாக 'இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின்' நிறுவனரும் மற்றும் 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் நிறுவனுருமான 'எம்.சிடி.எம். சிதம்பரம்' தனது நிறுவன குழுவின் தலைமையிடமாக 18 தளங்களுடன் ஒரு கட்டிடத்தைக் கட்ட 1952-ல் எண்ணினார். பின் 1953-ல் அதற்கான கட்டுமான பணிகளை, லண்டனைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர்களான (architect) 'எச்.ஜே. பிரவுன்' மற்றும் 'எல்.சி. மௌலின்' (H.J.Brown & L.C.Moulin) ஆகியோரால் வேலைகள் தொடங்கப்பட்டது. கட்டுமான வேலைகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் 'எம்.சிடி.எம். சிதம்பரம்' சிங்கப்பூர் விமான விபத்தில் 13 மார்ச் 1954-ல் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து 1957-ல் கட்டுமான பணிகளில் இருந்து லண்டனை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர்கள் விடைபெற்றனர். அதற்குப்பின், முருகப்பா குழுமதைச்சேர்ந்த கோரமண்டல் இன்ஜினியரிங் நிறுவனம் மூலமாக சென்னை கட்டட வடிவமைப்பாளரான 'எல்.எம்.சிட்லே' (L.M.Chitale) அதன் பணிகளைமேற்கொண்டார். அதன் நடுவில் இந்திய அரசு 1956-ல் இன்சூரன்ஸ் சேவையை நாட்டுடமை ஆக்கியதன் தொடர்ச்சியாக அந்த கட்டிடம் 1959-ஆம் ஆண்டு இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு, கட்டிமுடிக்கப்பட்டது. பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சரான மொரார்ஜி தேசாயால் திறக்கப்பட்டது. இதன் உயரம் 177 அடி. அன்றைய நிலவரப்படி இதன் கட்டுமான செலவு 8.7 மில்லியன் ரூபாய். இப்படி பல தடைகளைத் தாண்டி அத்தனை கோடிகளை செலவு செய்து கட்டப்பட்டு இருக்கும் அந்த கட்டிடம் என்றும் சென்னை கட்டிடங்களுக்கு ஒரு முன்னோடிதான். மேலும் முதல் முறையாக சென்னை வருபவர்களும், சென்னையிலே இருந்தும், முதல் முறையாக அண்ணா சாலை வழியாக பயணிப்பவர்களும் அந்தக் கட்டிடத்தை ஒரு நிமிடம் வியப்புடன்தான் பார்த்து செல்வார்கள்.

 

 

இப்படி ஒரு கட்டிடத்துக்குள் ஒரு வரலாற்றை மறைத்து வைத்துக்கொண்டு சென்னையில் நிற்கும் அந்த எல்.ஐ.சி.யின் 63-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று. இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது இதன் முதலீடு ஐந்து கோடி ரூபாய். அதன் சொத்து மதிப்பு 352.20 கோடி, அதன் மொத்த கிளை அலுவலகங்கள் 168.  அதே நிறுவனம் இன்று, 28.45 டிரில்லியன் சொத்து மதிப்புடன், 4,826 கிளை அலுவலகங்களுடன், 1.11லட்சம் பணியாளராகள் மற்றும் 11.48 லட்ச முகவர்களுடன். 14 நாடுகளில் தன் கிளை நிறுவங்களுடன்  இயங்கி வருகிறது. மேலும் 2018 நிதியாண்டில் மட்டும் 8.12% தனது வியாபாரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் 69.40% சந்தையை கைப்பற்றியுள்ளது. இதற்கு போட்டியாக எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. என பல நிறுவனங்கள் வந்தாலும், இன்றும் சந்தையிலும் மக்கள் மனதிலும், இன்சூரன்ஸ் என்று சொன்னதும் முதலில் வருவது, எல்.ஐ.சி.யாகதான் இருக்கும். 

 

 

Next Story

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; வாகனங்களைப் பழுது பார்க்க உதவி எண்கள் அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
'Miqjam' storm damage; Notification of helpline numbers for repairing vehicles

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களைப் பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் 1800 2100 007 என்ற எண்ணிற்கும், யமாஹா வாடிக்கையாளர்கள் 1800 4201 600 என்ற எண்ணிற்கும், டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் 1800 2587 555, ஹோண்டா வாடிக்கையாளர்கள் 1800 1033 434 என்ற எண்ணிற்கும், சுசூகி வாடிக்கையாளர்கள் 1800 1217 996 என்ற எண்ணிற்கும், மாருதி சுசூகி வாடிக்கையளர்கள் 1800 1800 180 என்ற எண்ணிற்கும், லாண்சன் டொயோடா வாடிக்கையளர்கள் 1800 1020 909 மற்றும் 1800 2090 909 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கியா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 1085 000 என்ற எண்ணிற்கும், ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் 1800 1024 645 என்ற எண்ணிற்கும், டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 209 8282 என்ற எண்ணிற்கும், டொயொட்டா வாடிக்கையாளர்கள் 1800 102 50001 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'Miqjam' storm damage; Notification of helpline numbers for repairing vehicles

இது மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், டிவிஎஸ், மாருதி, ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளன. சில நிறுவனங்கள் வாகன பழுதுபார்ப்புக்கு நடமாடும் சிறப்பு குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாகன பாதிப்பு மதிப்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இழப்பீடு தர காப்பீட்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் புகைப்படங்கள், பழுது நீக்கம் செய்ததற்கான ரசீதுகள் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்கள்  காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவுறுத்தல்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mijam storm damage; Minister Thangam Southern State Important Instructions to Auto Insurance Companies

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான வாகனங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் சேதமடைந்துள்ளன. அதே சமயம் காப்பீடு செய்யப்பட்ட சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள். மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருடன் இன்று (8.12.2023) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத்தின் 13 முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், இதுவரை 600 இருசக்கர, 1275 நான்கு சக்கர மற்றும் 445 வணிக வாகனங்கள் என மொத்தம் 2,320 மோட்டார் வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன எனத் தெரிவித்தனர். இதனையும் இனிவரும் நாட்களில் பெறப்படும் காப்பீட்டு விண்ணப்பங்களையும் உடனடியாக தீர்வு செய்வதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட இத்தருணத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவும் விதமாக விரைந்து செயலாற்றவும் வலியுறுத்தினார்.

அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும், உதவி மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் அமைத்தும் எளிதான முறையில் வாகன காப்பீட்டுத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. இப்பேரிடர் நிவாரண காலத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட உதவிடும் வகையில் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.