Skip to main content

2019 தேர்தலில் மோடிக்கு ஆப்பு உறுதியாகிருச்சு!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

 

பிரதமர் மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிப்பதற்காக பாஜக படு டகால்டி வேலைகளில் ஈடுபட்டது. ஆனாலும், உத்தரப்பிரதேசத்திலும், பிகாரிலும் வாக்காளர்கள் பாஜகவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

 

modi mask

 

குஜராத்தில் தொடங்கிய இந்த ஷாக் ட்ரீட்மெண்ட், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநில மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் எதிரொலித்தது. ஆனால், பாஜக அதை மழுப்பியது. மீடியாக்களிலும் அந்தத் தோல்விகள் பிரச்சாரம் ஆகாமல் தடுத்துவிட்டது.

 

சமீபத்தில் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது.

 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்தியநாத், துணை முதல்வர் மவுர்யா ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோரக்பூர், புகுல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

பிகாரில், ஆராரியா தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

 

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்தியநாத் தொகுதியான கோரக்பூரிலும், புகுல்பூரிலும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகிக்கிறது.

 

bihar election

 

எனவே, கோரக்பூரில் பாஜகவின் மானத்தைக் காப்பாற்றும் முயற்சியாக வாக்கு எண்ணும் இடத்திலிருந்து பத்திரிகையாளர்களையும், சமாஜ்வாதி கட்சியினரையும் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

 

ஆனால், ஏற்கெனவே பல தேர்தல்களில் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதாக பாஜக மீது புகார்கள் உள்ள நிலையில் இனியும் அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது என்று கூறப்படுகிறது.

2019 தேர்தலில் மோடிக்கு ஆப்பு உறுதியாகிருச்சு!

 

உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

 

பிரதமர் மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிப்பதற்காக பாஜக படு டகால்டி வேலைகளில் ஈடுபட்டது. ஆனாலும், உத்தரப்பிரதேசத்திலும், பிகாரிலும் வாக்காளர்கள் பாஜகவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

 

குஜராத்தில் தொடங்கிய இந்த ஷாக் ட்ரீட்மெண்ட், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநில மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் எதிரொலித்தது. ஆனால், பாஜக அதை மழுப்பியது. மீடியாக்களிலும் அந்தத் தோல்விகள் பிரச்சாரம் ஆகாமல் தடுத்துவிட்டது.

 

சமீபத்தில் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது.

 

yogi adhithyanath with maurya

 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்தியநாத், துணை முதல்வர் மவுர்யா ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோரக்பூர், புகுல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

பிகாரில், ஆராரியா தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

 

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்தியநாத் தொகுதியான கோரக்பூரிலும், புகுல்பூரிலும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகிக்கிறது.

 

எனவே, கோரக்பூரில் பாஜகவின் மானத்தைக் காப்பாற்றும் முயற்சியாக வாக்கு எண்ணும் இடத்திலிருந்து பத்திரிகையாளர்களையும், சமாஜ்வாதி கட்சியினரையும் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

 

ஆனால், ஏற்கெனவே பல தேர்தல்களில் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதாக பாஜக மீது புகார்கள் உள்ள நிலையில் இனியும் அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது என்று கூறப்படுகிறது.

 

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.