Skip to main content

இது என்ன அமித்ஷா வீட்டு சொத்தா... அதிர்ந்து போன மோடி, அமித்ஷா... விரைவில் குடியுரிமை சட்ட திருத்த மாற்றம்?

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து பல இந்துத்வா சட்டங்களை இந்தியாவில் கொண்டு வரலாம் என நினைத்திருந்த மோடி மற்றும் அமித்ஷா கூட்டணி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எழுந்த எதிர்ப்பலையைப் பார்த்து "இடி கேட்ட நாகம் போல' அரண்டு போயிருக்கிறது என்கிறார்கள், டெல்லி பா.ஜ.க. தலைமையைச் சேர்ந்தவர்கள்.

 

bjp



"குடியுரிமை சட்டத்திருத்தம் இந்துக்களைப் பாதுகாக்கும் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிராக அமையும் இந்த சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள். கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ள மேலை நாடுகள், இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஆகியோர் ஆதரிப்பார்கள்'' என ஆர்.எஸ்.எஸ். கணக்குப் போட்டது. இந்த சட்டத்தை இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஆதரித்துவிட்டால் அடுத்தகட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரலாம் என ஆர்.எஸ்.எஸ். திட்டம் போட்டது. இருபது கோடி இசுலாமியர்கள் உள்ள இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமான இந்துக்களை இந்துத்வா பக்கம் திருப்பி விட்டால் பா.ஜ.க. நிரந்த ஆளுங்கட்சியாகிவிடும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கணக்கில் உள்ள உள்கணக்கு.

 

mamtha



குடியுரிமை சட்டத் திருத்தம் பாராளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றும்வரை ஆர்.எஸ்.எஸ். + பா.ஜ.க. வின் இந்தக் கணக்கு சரியாகவே வேலை செய்தது. ஒரிசாவின் பிஜு ஜனதாதளம், பீகாரின் ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை ஆதரித்துதான் வாக்களித்தன. தமிழகத்தின் அ.தி.மு.க., மராட்டியத்தின் சிவசேனா ஆகிய கட்சிகளும் ஆதரித்தன. இந்தியாவில் வேறெந்த அரசியல் கட்சியும் இந்த சட்டத்தை தற்பொழுது ஆதரிக்க தயாராக இல்லை. பிஜு ஜனதாதளமும் ஐக்கிய ஜனதா தளமும் "நாங்கள் இந்த சட் டத்தை ஆதரிக்கமாட்டோம்' என இப்போது வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன.


இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்ஸியை விட இந்தச் சட்டம் அதிகமான எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மக்கள் வீதிக்கு வந்ததைப் பார்த்து இந்திய அரசியல் கட்சிகள் மிரண்டுபோனதன் விளைவாகத்தான் பிஜு ஜனதாதளமும் ஐக்கிய ஜனதாதளமும் எதிர்ப்பு நிலையை எடுத்தன என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்.

 

 

congress



கிறிஸ்துவர்கள் இந்தச் சட்டத்தை ஆதரிப்பார்கள் என்கிற கணக்கும் பொய்யாகிப் போனது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 54 பேர்தான். கிறிஸ்துவர்களை ஆதரவாக சாட்சியம் சொல்ல வைக்கலாம் என இந்திய அரசு திட்டமிட் டது. அதற்கு அவர்கள், "பாகிஸ்தானில் சர்ச்சுகள் தாக்கப்படுகின்றன. அது உண்மைதான். ஒரிசாவில் ஒரு கிறிஸ்துவ பாதிரியாரை குடும்பத்துடன் எரித்துக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். காரர் மத்திய மந்திரியாகிவிட்டார். அவர் சமஸ்கிருதத்தில் பாராளுமன்றத்தில் பேசுகிறார். எனவே இந்தியாவில் நாங்கள் தாக்கப்படுகிறோம்'' என மத்திய அரசின் சாட்சியம் அளிக்கும் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.

கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை அளிக்கிறோம் என அறிவித்ததால் மேற்கத்திய நாடுகளின் மீடியாக்கள் மவுன மாகிவிடும் என ஆர்.எஸ்.எஸ். நினைத்தது. கடந்தவாரம் முழுக்க லண்டனிலிருந்து வெளிவரும் "தி கார்டியன்', அமெரிக்காவின் "நியூ யார்க் டைம்ஸ்' போன்ற பத்திரிகைகள் நரேந்திர மோடியை "ஹிட்லர்' என வர்ணித்தன. மோடி அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கெதிரான மக்கள் போராட்டங்களை முதல்பக்கத்தில் வெளியிட்டு முகத்திரையைக் கிழித்தன.

 

dmk



இந்த சட்டத்தை எதிர்த்து உலக நாடுகளில் உள்ள இசுலாமியர்கள் சிலர் மட்டும் போராடுவார்கள் என மோடி எதிர்பார்த்ததற்கு மாறாக, லண்டனின் மையப்பகுதியில் ஈழத்தமிழர்கள் உட்பட இந்துக்கள் பலர் போராடினார்கள். "இந்தியா மதச்சார்பற்ற நாடு. இது என்ன அமித்ஷாவின் அப்பன் வீட்டு சொத்தா' என ஜாமியா மில்யா மாணவர்கள் டெல்லியில் எழுப்பிய கோஷம் லண்டனில் உள்ள இந்துக்களிடமிருந்து ஒலித்ததைக் கேட்டு இந்திய அரசு மிரண்டு போனது. இந்தியாவின் அறிவாலயங்களாக கருதப்படும் ஐ.ஐ.டி.க்கள், மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள காசி இந்து பல்கலைக் கழகம், பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகம், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் போன்ற இடங்களில் ஆவேசத்துடன் நடந்த ஆர்ப்பாட்டங்கள் இந்த சட்டத்திற்கு இந்துக்களின் ஆதரவு இல்லை என்பதையே காட்டியது. இந்தியர்கள் மகாத்மா காந்தி வழியில் மதச் சார்பற்றவர்கள் என நிரூபித்ததைப் பார்த்து அரண்டுபோனது மத்திய அரசு.


இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு இந்த சட்டத்தை எதிர்ப்பது மோடியையும் அமித்ஷாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த சட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக அதை நடத்த முடியாதோ என மத்திய அரசு திகைத்துப்போயுள்ளது. "வடகிழக்கு மாநிலங்களின் பூர்வகுடிகளை பாதுகாக்க நாங்கள் அங்கே இந்தியர்கள் சொத்து வாங்க தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவோம்' எனச் சொல்லியிருக்கிறது. ஆனால் அப்படி அசாமிலும் மேற்குவங்கத்திலும் சொல்லவே முடியாது. அசாமும் மேற்குவங்க மும் போராட்டங்களின் உச்ச கட்டத்தில் இருக்கின்றன.

சுப்ரீம்கோர்ட், ஜனவரி மாதம் வரை இந்தச் சட்டம் தொடர்பான விளக்கம் கொடுக்க மத்திய அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி, போராட்டங்கள் குறையும் வகையில் சட்டத் திருத்தம் செய்யலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறது மத்திய அரசு என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். பா.ஜ.க.வின் இந்துத்வா ஆயுதம் பூமராங் ஆகியுள்ளது.

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.