Skip to main content

உத்தரப்பிரதேசத்தில் வரலாறு படைத்த பா.ஜ.க! 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

BJP makes history in Uttar Pradesh!

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (10/03/2022) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய கட்சிகளை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கட்சித் தொடங்கிய குறுகிய காலத்தில் டெல்லியைத் தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 262 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 136 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும், மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைப்பது உறுதியாகிவிட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த 1985- ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே கட்சித் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆட்சி அமைக்க 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 250- க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

BJP makes history in Uttar Pradesh!

கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த  உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் 384 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 312 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், பா.ஜ.க. இம்முறை அதிக தொகுதிகளை இழக்கக்கூடும் என்ற போதிலும், அக்கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 2017- ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே, தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க.வுக்கு மக்கள் பெருவாரியான வெற்றியை வாரி வழங்கினர்.


பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருந்த சமாஜ்வாதி கட்சி, கடந்த தேர்தலை விட இம்முறை அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. 2017- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 311 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சுமார் 125 தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்று வரும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 2017- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இம்முறை அதற்கும் குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BJP makes history in Uttar Pradesh!



கடந்த தேர்தலில் 110 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, இம்முறை அதே எண்ணிக்கையிலான தொகுதிகளோ அல்லது அதை விட குறைவாகவோ தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.