Skip to main content

கோடையில் ஒரு குளியல்

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

கோடையில் ஒரு குளியல் என்ற தலைப்பிற்கேற்றபடி ''ஒரு'' குளியலை பற்றி மட்டும்தான் கூறுவீர்களா. என்றால் அதுதான் இல்லை. குளிப்பதில் பல வகைகள்  உள்ளன. சாதாரண காலங்களிலேயே குளியலை என்ஜாய் பண்ணும் நாம் கோடைகாலத்தில் எப்படி விட்டுக்கொடுப்போம். குளியல் சாதாரண விஷயமல்ல. அண்மையில் ஐஸ் பக்கெட் குளியல் என்றெல்லாம் சவால் விடப்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கப்போகும் குளியல் அதுவல்ல. கோடைகாலத்தில் என்னென்ன முறைகளில் குளிக்கலாம், குளியலை எப்படி சுவரசியமாக்கலாம்...

bath

நாம் எப்பொழுதுமே (குளியலை பொறுத்தவரை) நினைக்கும் முதல் விஷயம் ஆஹா ஆறு,அருவி, குளம், குட்டை போன்றவற்றில் போய் மிதக்க வேண்டும் என்பதுதான். கோடைகாலத்தில் குளிப்பதற்காகவே இன்ப சுற்றுலா போகும் ஆர்வமும் நம்மில் பலரிடம் உண்டு. இருந்தாலும் வீட்டுக் குளியலைக்கூட சுவாரசியமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும். அப்படி கைவசம் நிறைய குளியல்கள் இருக்கிறது அதைதான் பார்க்கப்போகிறோம்.

குளிர்ச்சியான எண்ணெய் குளியல்

இந்தக் குளியல் ஒன்றும் புதிய முறையல்ல நாம் மறந்துவிட்ட ஒன்றுதான். வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்வது நல்லது. குளிப்பதற்கு முன்பு நல்லெண்ணையை அல்லது தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் பூசி மசாஜ் செய்துகொண்டு ஒரு அரைமணி நேரம் கழித்து சீயக்காய் கொண்டு தேய்த்து குளித்து பாருங்கள் கண்டிப்பாக உடலில் உள்ள வெப்பம் வெளியேறிவிடும். அன்றைய முழு நாளின் குளிர்ச்சி நிலையை அனுபவித்துவிட்டீர்கள் என்றால் அடுத்து எப்போதுடா திரும்பவும் எண்ணெய் குளியல் எடுப்போம் என ஏங்குவீர்கள் அவ்வளவு குளிர்ச்சியை தரக்கூடியது எண்ணெய் குளியல்.

bath

சோர்வை நீக்கும் அருகம்புல் குளியல்

நம் வீட்டிற்கு அருகிலிருக்கும் அருகம் புல்லை எடுத்து அதை சாறாக பிழிந்து தேவையான அளவு தேங்காய் எண்ணையுடன் சேர்த்து சுண்டக்காய்ச்சி அதை உடல் முழுவதும் பூசி குளித்தால் கண்டிப்பாக சோர்வு நீங்கும். இதுவும் ஒரு வகை எண்ணைக்குளியல் போன்றதுதான். அருகம்புல் குளியல் நம் சோர்வை நீக்கி புத்துணர்வை தரும்.  

bath

நுங்கு,தேங்காய், இளநீர் குளியல் 

நுங்கு எப்பொழுதுமே குளிர்ச்சி தரக்கூடிய ஒரு உணவு, கிராமப்புறங்களில் இன்றளவும் கோடைகாலங்களில் வியர்கூருவிற்கு நல்ல தீர்வைத்தரும் மருந்தாக பார்க்கப்பட்டு வருகிறது நுங்கு. அப்படி இருக்க நுங்கு குளியலும் உங்களின் குளியல் லிஸ்டில் முக்கிய இடம்பெற்றால் உண்மையில் குளியலின் சுகத்தை அனுபவிக்க போகிறவர்கள் நீங்கள்தான். முதலில்  சிறிது தேங்காய் பத்தைகளை எடுத்து இளநீர் சேர்த்து அரைத்து அதனுடன் நுங்கை சேர்த்து ஜெல் போன்று குழைக்க வேண்டும். அந்த ஜெல்லை அப்படியே உடல்முழுவதும் பூசி தேய்த்துவிட்டு குளித்துப்பாருங்கள் உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி நீங்கள் வெயிலில் போனால் கூட உடல் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்ளும். அந்த அளவிற்கு உடல் குளிர்ச்சியை உணர்வீர்கள்.

bath

தொற்று நீக்கும் உப்பு குளியல்

அட உப்பில் ஒரு குளியலா என்று யோசிக்கீர்களா ஆம். நாம் உபயோகிக்கும் சாதாரண உப்புடன், எப்சம் உப்பு, பேக்கிங் சோடா போன்றவற்றை குளிக்கும் நீரில் சிறிதளவு சேர்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால் உடல் சோர்வு மற்றும் கோடைகாலங்களில் உடல் தசைகளில் ஏற்படும் வலிகள் ஆகியவை நீங்கும். நாம் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து உடல்சோர்வு மற்றும் வலியுடன் வரும்நேரத்தில் இந்த குளியலை மேற்கொள்வது சிறிது நேரத்திலேயே முழு  புத்துணர்ச்சியையும் தரும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள பூஞ்சை மற்றும் தொற்றுகளை நீக்கும். 

இலவச ஏ.சிக்கு நெல்லிகுளியல் 

இலவசமாக நீங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் ஏசி கூடவே வரவேண்டுமென்றால் அதற்கு நீங்கள் நெல்லி குளியலை தேர்ந்தெடுத்தால்தான் சாத்தியம். அதாவது  ஆறு நெல்லிக்காய்களை எடுத்து அதன் விதைகளை நீக்கி கொஞ்சம் வெந்தயம், கொஞ்சம் கசகசா சேர்த்து தயிரில் ஊறவைத்து விழுதுபோல் அரைத்து உடல்முழுவதும் பூசி குளித்து பாருங்கள் கண்டிப்பாக ஏசி உங்கள் கூடவே வருவதை போன்று உணர்வீர்கள் அப்படி ஒரு குளுமையை தரும் இந்த நெல்லிக்காய் குளியல்.
 

bath


இந்தக் குளியல் முறைகளெல்லாம் உடலுக்கு ஏற்ற, கோடைகாலத்தில் வெயிலில் துவண்டுபோகும் உங்களை புத்துணர்ச்சியை உச்சத்திற்கு கொண்டுபோகும் குளியல் முறைகள். பழமைகள் திருப்பி புதியனவையாக உருமாறும் இந்த காலகட்டத்தில் பரம்பரிய குளியல் முறையையும் புதுப்பித்து, குளித்து குதூகலிக்க வாழ்த்துக்கள் நண்பர்களே.... 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.