Skip to main content

இறுதிச்சுற்று

Published on 03/08/2018 | Edited on 04/08/2018
மறைந்தார் போஸ்! திருப்பரங்குன்றம் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மக்களின் ஆதரவுடன் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானவர். இதற்குமுன்பு 2006, 2011 தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள போஸ், எம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

15 ஓவர்களாக குறைப்பு; மீண்டும் துவங்கும் இறுதிப்போட்டி

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

bb

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழை காரணமாக முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பாதியில் மழை பொழிந்ததால் போட்டியானது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது.

 

பின்னர் 215 ரன்கள் இலக்காக வைத்து களத்தில் இறங்கிய சென்னை அணி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பொழிந்தது. இதனால் போட்டியானது மழை காரணமாக நிறுத்தப்பட்டது. நேற்றே ஐபிஎல் இறுதிப்போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது மேலும் ரசிகர்களை கவலையடைய செய்தது.

 

இந்நிலையில் மீண்டும் போட்டியானது நள்ளிரவு 12.10 மணிக்கு தொடரும் என்றும் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

நக்கீரன் 07-08-2018

Published on 03/08/2018 | Edited on 04/08/2018
Nakkheeran 07-08-2018
Read Full Article / மேலும் படிக்க,