Skip to main content

அதிரடி ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் விஷால்... கவனம் ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ!

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

vishal starring Veeramae Vaagai Soodum movie Sneak Peek released

 

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்திருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படம்  வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

 

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த ஸ்னீக் பீக் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச வசனம் - விஜய்யைத் தொடர்ந்து விஷால்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vishal rathnam trailer released

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளியானது. பின்பு கடந்த மார்ச் 3, படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியானது. அடுத்ததாக ‘எதனால’ பாடல் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் பிரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.  அந்த வகையில் ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையோர பகுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு ஆபத்து வருகிறது. அவரை காப்பாற்ற விஷால் முயற்சி எடுக்கிறார். எதனால் பிரியா பவானிக்கு பிரச்சனை வந்தது. விஷால் அவரை காப்பாற்றினாரா இல்லையா, விஷாலுக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் என்ன தொடர்பு? ஆகியவற்றை விரிவாக விவரிக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் விஷால், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆக்ரோஷமாக சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுகின்றனர்.
 
இந்த ட்ரைலரில் விஷால் பேசிய அதே வசனத்தை, கடந்த ஆண்டு வெளியான லியோ பட ட்ரைலரில் விஜய் பேசினார். அப்போது அந்த வசனத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்ப, பின்பு அதை திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் விஷாலும் அதே வசனத்தை பேசியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Next Story

“60% பேர் கெட்டவன், 40% பேர் தான் நல்லவன்” - ஹரி ஆதங்கம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
hari about vishal rathnam movie promotion van

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழு தற்போது பிரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் தமிழகம் முழுவதும் உலா வர படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேனின் முதல் பயணத்தை தொடங்கி வைத்தார் ஹரி. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் என்னுடைய 17வது படம். சாமி, சிங்கத்துக்கு அப்புறம் சரியான ஒரு ஆக்‌ஷன் படம் கொடுக்க வேண்டும் என நினைச்சேன். அதை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். விரட்டி விரட்டி அடிக்கணும், துரத்தி துரத்தி மிதிக்கணும், இந்த மாதிரி ஒரு வெறி வரும். அந்த வெறியை எப்படி தணிக்க வேண்டும் என பார்த்தால் படம் பார்த்து ஜாலியா தணிச்சிட்டு போயிடலாம். யாரையும் அப்படி அடிக்க தேவையில்லை. 

ஏன் அந்த வெறியில் படம் எடுத்திருக்கிறேன் என்றால், இன்னைக்கு ரோட்டில் போவதில் 60% பேர் கெட்டவன். 40% பேர் தான் நல்லவன். கெட்டவன்கிட்டயிருந்து நல்லவனை காப்பாத்தணும். அதை போலீஸ் செய்ய முடியும். இல்லைன்னா, பொது எண்ணம் கொண்ட ரத்னம் மாதிரி ஒரு ஹீரோவால் சினிமாவில் முடியும். ரோட்டில் போகிறவனை யாரும் அடிக்க முடியாது. அது விதிமுறையும் கிடையாது. அதுக்கு வாய்ப்பும் இருக்காது. இருந்தாலும் அடிக்க வேண்டும் என நினைக்கிறவன் தான் ஹீரோ. அதில் பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறவன் தான் ஹீரோ. அது சினிமாவில் மட்டும் தான் நடக்கும். அந்த சினிமாவை தான் எடுத்திருக்கிறேன். 

அநியாயத்தை தட்டி கேட்பதை இன்றைய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி பண்ணியிருக்கேன். எல்லா அரசியல் தலைவர்களும் நமக்கு தெரிஞ்சவங்க தான். ஆனாலும் அவங்க தேர்தல் பிரச்சாரம் பண்ணால் தான் மக்கள் ஓடு போட வராங்க. அதே போல் நாங்களும் எங்க படத்தை விளம்பரப் படுத்த வேண்டும் என்ற தேவை இருக்கு. இந்த வண்டி தமிழ்நாடு முழுக்க வலம் வரும். நாங்களும் பயணிக்கவுள்ளோம். மக்களை மதித்து பண்ணுவது தான் இந்த பப்ளிசிட்டி” என்றார்.