Skip to main content

"நான் செஸ் காயினாக நகர்த்தப்பட்டேன்" -  விஷால், 96 பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த '96' திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. பார்ப்பவர்களின் பழைய காதலை, நினைவுகளை தூண்டி நெகிழ வைக்கும் இந்தப் படம், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
 

vijay sethupathi 96 thanks giving



ஆனால், படம் வெளியாவதற்கு முந்தைய நாளான கடந்த வியாழன் கிழமை அன்று, வெளியீட்டில் திடீர் பிரச்சனை ஏற்பட்டது. இந்தப் படத்தை தயாரித்த நந்தகுமார், ஏற்கனவே தயாரித்த 'கத்திச்சண்ட' போன்ற படங்களின் தோல்வி காரணமாக சில ஃபைனான்சியர்களுக்கு பணம் தர வேண்டியிருந்ததால் படத்தை வெளியிட தடையாக இருந்தனர். இதனால், வியாழன் அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக்காட்சி தள்ளிப் போனது. நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலுக்கும் இந்தத் தயாரிப்பாளர் பணம் தர வேண்டியிருந்ததாகவும் அதனால் அவரும் தடையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி தலையிட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு படவெளியீட்டுக்கு துணை புரிந்துள்ளார். விஜய் சேதுபதி தலையீட்டால் விஷாலும் இறங்கி வந்து விட்டுக்கொடுத்ததாக விஜய் சேதுபதியே கூறினார். இப்படி வெளியான இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இந்தப் பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி பேசியது...

"விஷால் நல்ல மனுஷன். முன்னாடி தெரியறவங்க மேலதான் தவறுன்னு நாம நினைக்கிறோம். அப்படியில்ல. எனக்கு அவர் மேல வருத்தமில்லை. அவர் எவ்வளவு பணத்தை இதுவரை விட்டுக்கொடுத்துருக்காரோ? இப்போ கூட அவர்தான் பணத்தை வேணாம்னு சொல்லியிருக்கார். அது அவரோட நல்ல மனசு.

உங்களுக்கு வெளியே தெரிஞ்சது கம்மிதான். அன்னைக்கு நைட் நான் அங்கதான் இருந்தேன். இதுவரைக்கும் நான் செஸ் விளையாடிதான் பாத்திருக்கேன். அன்னைக்குதான் நான் செஸ் காயின் ஆனேன். என்னை நகர்த்துறதை நான் உணர்ந்தேன். செஸ் போர்டுல நீங்க காயினா மாறி,  நகர்த்தப்படும்போதுதான் அந்த அனுபவம் தெரியும். இது சீமராஜா படத்தப்போ சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது. அதுக்கு முன்னாடி விமலுக்கு நடந்தது.

ஃபைனான்சியர்ஸ் மேலும் முழு தவறில்லை. அவங்களுக்கு பணம்தான் அடையாளம். எங்களுக்கு படம்தான் அடையாளம். என் படம் வெளிவந்து வெற்றி பெற்றாதான் நான் இப்போ உங்ககிட்ட சந்தோஷமா பேசுற மாதிரி பேச முடியும். வெளியில படம் ஹிட், கூட்டம் அலைமோதுதுன்னு சொல்றாங்க. ஆனா, தயாரிப்பாளர்களுக்கு அந்தக் கணக்கே வருவதில்லை. இங்க வியாபாரம் ஒருத்தர்கிட்ட இல்ல.

நான் நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு நூறு பவுன் செஞ்ச போது எங்க அம்மா கவலைப்பட்டாங்க, 'இவனும் இவுங்க அப்பன் மாதிரி ஊருக்கு கொடுத்து அழிஞ்சுருவானோ'னு. ஆனா, அங்க என் அம்மாவையும் கூட்டிட்டுப் போய் உட்கார வைத்தேன். அப்போ அவங்க சந்தோஷப்பட்டாங்க. இங்க எல்லாத்தையும் ஓப்பனா பேச முடியாது, நிறைய பிரச்சனைகள் இருக்கு. தீர்வில்லாத பிரச்சனைகளை வெளியே சொல்லி என்ன பண்ணுறது?"    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.