Skip to main content

உதவி இயக்குனர்கள் செயலால் நெகிழ்ந்த ஷங்கர்

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
shankar

 

 

 

கடந்த 1993ஆம் ஆண்டு 'ஜென்டில்மேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். இப்படம் வெளியாகி நேற்றுடன் 25 ஆண்டுகளை நிறைவடைந்தது. மேலும் இயக்குனர் ஷங்கர் திரையுலகிற்கு அறிமுகமாகியும் 25 ஆண்டுகளாகியுள்ளதை கொண்டாடும் விதமாக சங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் சங்கரிடம் ஆரம்பகால கட்டத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களிலிருந்து, இப்போது பணிபுரியும் உதவி இயக்குனர்கள் வரை கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் இதில் ஷங்கரின் உதவி இயக்குனர்கள் அனைவருமே ஷங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி, அதனை ஒரு புத்தகமாக தொகுத்து அதனை பரிசாக வழங்கினார்கள். இதையடுத்து அனைவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தன் உதவி இயக்குனர்களுடனான சந்திப்பு குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... “உதவி இயக்குனர்களின் அன்பால் நெகிழ்ந்துவிட்டேன். அவர்கள் அனைவரும் இல்லாமல் எனது பயணம் சாத்தியமில்லை” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா ! 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
2.0

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.

 

 

Next Story

ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு 

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
2.0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும்  2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2.0