Skip to main content

முறையற்ற உறவு; தேசிய விருது வென்ற நடிகையை விரட்டி விரட்டி அடித்த நடிகரின் மனைவி

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Prakruti Mishra assaulted by costar babhushaan wife

 

ஒடிசா மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர் பாபுஷான் மொஹந்தி என்பவருடன் இணைந்து பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். அண்மையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர். அதற்காக புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு நடிகை பிரக்ருதி மிஸ்ராவும், நடிகர் பாபுஷான் மொஹந்தி இருவரும் ஒன்றாக இணைந்து காரில் சென்றுகொண்டிருந்தனர்.

 

அப்போது திடீரென காரை வழி மறைத்த நடிகர் பாபுஷான்  மனைவியான திருப்தி மொஹந்தி நடிகர், நடிகை இருவரையும் பலமாக தாக்கியுள்ளார். இதனால் காரில் இருந்து இறங்கி ஓடிய நடிகையை சாலையில் ஓட ஓடவிட்டு பாபுஷானின் மனைவி அடித்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து தப்பித்த நடிகை பிரக்ருதி மிஸ்ரா ஆட்டோ ரிக்ஷாவில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை பிறகு இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தாய் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். 

 

ad

 

இந்நிலையில் இவரைத் தொடர்ந்து நடிகர் பாபுஷானின் மனைவி திருப்தி மொஹந்தி, தன்னுடைய கணவரை பிளாக்மெயில் செய்து நடிகை பிரக்ருதி மிஸ்ரா அவருடன் வாழ நிர்ப்பந்தித்து வருவதாகவும், அவர் எங்கள் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு எங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருந்தது என்றும், அவர் வந்ததால் தற்போது நிம்மதி இழந்து தவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த கோபத்தில் தான் நான் இப்படி நடந்து கொண்டதாகவும், எனக்கும் என் பிள்ளையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

 

நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு ஹலோ அர்சி என்ற படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.