Skip to main content

"வானும் நீரும் சேரும்" - பொன்னியின் செல்வன் படத்தின் 'அலைகடல்' பாடல் வெளியீடு

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

ponniyin selvan Alaikadal song Lyric Video released

 

 


மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழு. 

 

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அலைகடல்’ எனும் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை அந்த்ரா நந்தி என்பவர் பாடியுள்ளார். சிவா ஆனந்த் என்பவர் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடலில் வரும் "வானும் நீரும் சேரும்... என்றோ ஓர் நாள் தானோ" என்ற வரிகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்