Skip to main content

'பரியேறும் பெருமாளுக்காக தான் காத்திருந்தேன்' - எடிட்டர் செல்வா ஆர்.கே

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
selva RK

 

நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'பரியேறும் பெருமாள்' படம் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக இப்படம் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர்களில் இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கேவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் ளிடம் அசோசியேட் எடிட்டராக பணியாற்றிய செல்வா ஆர்.கே இப்படம் குறித்த அனுபவங்கள் குறித்து பேசும்போது...

 

 

 

"இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தில் முதல் படம் பண்ண போகிறோம்.  இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு. அப்படின்னு சொன்னார். நானும் இயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன். அதனால் எளிதாக ஆர்வத்துடன் என்னால் வேலை செய்ய முடிந்தது. மேலும் விஷ்வாலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது. இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது. இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மக்களின் சுயத்தை கேள்வி கேட்டவர்" - மாரி செல்வராஜ் உருக்கம்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

mari selvaraj about Nellai Thangaraj

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில்  2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்ற நெல்லை தங்கராஜ், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான தங்கராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே மாரி செல்வராஜ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவரை தேடி கண்டுபிடித்து சினிமாவுக்கு கொண்டு வந்தேன். எங்க இரண்டு பேருக்கும் பயங்கரமான ஒரு உறவு. அப்பா பையன் போல... இப்பவும் வேலைக்கு போய்க்கிட்டு இருக்கிற மனுஷன். தன் குடும்பத்துக்காகவும் தனக்காகவும் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருந்தார். அவருடைய மரணம் மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கு. ஒரே ஒரு படத்தின் மூலம் நிறைய மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் இடம் பிடித்தவர்களிடம் அவர்களது அகத்தை, சுயத்தை கேள்வி கேட்டவர். அவருடைய வாழ்க்கையில் அவரது கனவுகள் தாமதமாகத் தான் ஆரம்பித்தது. அது சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார். 

 

 

Next Story

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நெல்லை தங்கராஜ் மரணம்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Nellai Thangaraj, who became famous for the movie Pariyerum Perumal, passed away

 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

 

மரபார்ந்த தமிழ்க் கலைகளின் முன்னோடியாக இருக்கும் தெருக்கூத்தில், பெண் வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தவர் தங்கராஜ். கூத்து மரபில் பெண் வேடமிட்டு நடிப்பவர்களின் இயல்பு வாழ்க்கையும் அதே பெண் மனப்பாங்கோடே இருக்கும் என்பார்கள். அதுபோலவே இவரின் ஒப்பாரிக்கு கண்ணீர் சிந்தாதவர் இல்லை. அப்படி ஒருநாள் வெள்ளரி தோட்டத்தில் காவலில் இருந்தவரை எழுப்பி ஒப்பாரி பாடச் சொல்லிக் கேட்டு திரையில் நடிக்க வைத்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்த நெல்லை தங்கராஜ் தனது சிறந்த நடிப்பால் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்றார். வயதாகிவிட்டதால் தங்கராஜ் தெருக்கூத்தில் வேடம் கட்டி ஆடுவதை நிறுத்தி விட்டார்.  இரண்டு மகள்களையும் படிக்க வைத்துவிட்ட இவர், குடும்ப கஷ்டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து எலுமிச்சை, பனங்கிழங்கு, காய்கறி போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் விற்றுப் பிழைத்து வந்துள்ளார். அந்த வியாபாரமும் முடங்க ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்பட்டார். 

 

குடிசையில் வசித்த அவரின் வீடு பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்துள்ளது. அவருடைய வீட்டை சீரமைத்துத் தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தமுஎகச மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜுக்கு வீடு கட்டப்பட்டது. இந்நிலையில் கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.