Skip to main content

வலிமை பட தயாரிப்பாளரிடம் கை வரிசை காட்டிய மர்ம கும்பல்

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Mystery gang misused the 'valimai' movie filmmaker's credit card

 

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் அஜித் நடிப்பில்  2019-ஆம் ஆண்டு வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் தமிழுக்கு தயாரிப்பாளராக அறிமுகமானார். சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளியான 'வலிமை' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனை அடுத்து தமிழில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள 'வீட்ல விசேஷங்க' படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் போனி கபூர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.3.82 லட்சம் முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி போனி கபூர் வங்கிக்கணக்கில் இருந்து மர்ம நபர்களால் ரூ.3.82 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.  இதை அறிந்த போனி கபூர் சம்மந்தபட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதன் பிறகு காவல் துறையிடம் க்ரெடிட் கார்ட் தகவல்களை பற்றி என்னிடம் யாரும் கேட்கவில்லை, இதுதொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என கூறியுள்ளார். 

 

போனிகபூர் க்ரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் சேகரித்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகப்படுகின்றனர். மேலும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த முறைகேடு வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.           

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

“உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன்” - போனி கபூர் உறுதி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
boney kapoor about sri devi biopic

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீ தேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.  

இந்த சூழலில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போனி கபூர், “அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும். அதனால் அவரது பையோ பிக் உருவாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்றுள்ளார்.