Skip to main content

வெளிப்படையா கேட்குறீங்களே... உங்களுக்குக் கூச்சமே இல்லையா? - மாரி செல்வராஜை கலாய்த்த தனுஷ்!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

mari selvaraj

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்த நிலையில், ‘கர்ணன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இயக்குநர் மாரி செல்வராஜ், யோகி பாபு, சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ad

 

படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் நிகழ்வில் பேசுகையில், "ஒரு நாள் எனக்கு ஃபோன் வந்தது. ஃபோன் எடுத்தவுடன் 'நான் தனுஷ் பேசுகிறேன்' என்று ஒரு குரல் கேட்டது. அதை ரியலைஸ் பண்ணவே எனக்கு ரொம்ப டைம் எடுத்துச்சு. சந்தோஷ் சார் உங்க நம்பர் குடுத்தாரு... நேர்ல மீட் பண்ணலாமா என்றார். அவர் அப்போது 'பரியேறும் பெருமாள்' படம் பார்க்கல. படம் ரிலீஸாகி பத்து நாள்ல இது நடக்குது. நான் நேர்ல போய் மீட் பண்ணேன். தனுஷ் சார், 'நான் பார்க்குற மனிதர்கள் எல்லாம் உங்களைப்பத்தி பேசிக்கிட்டே இருக்காங்க... அதான் உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சு... எதாவது கதை இருந்தா சொல்லுங்க... நாம பண்ணலாம்' என்றார். பின் அவரே ஏதாவது கதை இருக்கானும் கேட்டார். நான் வச்சிருக்கிற கதை எல்லாம் நீங்கதான் பண்ண முடியும் சார்னு சொல்லிட்டு, 'கர்ணன்' கதைய அரை மணி நேரம் சொன்னேன். சாருக்கு கதை ரொம்ப பிடிச்சிருச்சு. உடனே தாணு சார்கிட்ட சொன்னார். நான் அவர்கிட்ட கதை சொல்லப்போனேன். அதற்குள் தனுஷ் சாரே கதை சொல்லிட்டார். இருந்தாலும் நான் சொல்றேன் சார்னு சொல்லிட்டு தாணு சார்கிட்ட அரை மணி நேரம் கதை சொன்னேன். உன் இஷ்டப்படி எடு... வேண்டும்கிறதை பண்ணிக்கொடுக்கிறேன் என்று தாணு சார் சொன்னார்.

 

எல்லாமே உடனே நடந்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நல்ல விஷயங்கள் எல்லாம் இப்படித்தான் நடக்கும்னு தனுஷ் சார் சொன்னார். இந்தக் கதையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறோம் என்று பயம் இருந்தது. இந்தப் பயத்தை தனுஷ் சாரும் தாணு சாரும்தான் போக்குனாங்க. நீ எடுத்து முடிச்சிட்டு வா... நான் இருக்கேன்னு தாணு சார் சொன்னாரு. நீங்க எடுங்க... நான் இருக்கேன்னு தனுஷ் சார் சொன்னாரு. ஒன்றரை நாள்ல பாட்டு பாடிக்கொடுத்தாரு... டப்பிங் பேசிக்கொடுத்தாரு... ஃபோட்டோஷூட் பண்ணிக்கொடுத்தாரு. ஹைதராபாத்தில் இருந்துவந்து வீட்டிற்கே செல்லாமல், இந்த மூன்றையும் முடித்துக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அமெரிக்கா கிளம்பிச் சென்றார். இந்த உழைப்பை இன்று வரை என்னால் நம்பவே முடியல. 

 

பின் படம் பார்த்துவிட்டு, மிகப்பெரிய உயரம் உங்களுக்குக் காத்திருக்கு என்றார். அது மட்டும்தான் சொன்னார். படம் பற்றி எதாவது சொல்லுவார்னு நினைச்சு நானும் வெயிட் பண்ணேன். பிறகு, நானே கேட்டுவிட்டேன். 'அதான் உங்களுக்கு மிகப்பெரிய உயரம் காத்திருக்குனு சொன்னனே சார். எல்லாத்தையும் அப்படியே சொல்லிரனுமா. வெளிப்படையா கேட்குறீங்களே... உங்களுக்குக் கூச்சமே இல்லையா சார்னு சொன்னார். அவரைத் தொடர்ந்து, படம் பார்த்த தாணு சார் ரொம்ப கண்கலங்கிட்டாரு. கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கொடுத்தார். 'பரியேறும் பெருமாள்' முடித்துவிட்டு இருந்த தைரியத்தை விட இப்போது பல மடங்கு தைரியத்தோடு இருப்பதற்குக் காரணம் அவர் கொடுத்த அந்த முத்தம்தான்" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.

Next Story

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வெளியிட்ட வெற்றிமாறன் வெளியிடும் பட அப்டேட்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

சின்னத்திரையில் அறிமுகமாகி, அதற்கு பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரகளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸ் உடன் இடம் பெறுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.