Skip to main content

'இந்த தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க' - மனோபாலா 

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

எல்.எஸ்.தியன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் 'படைப்பாளன்'. கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை எல்.எஸ்.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் மனோபாலா பேசும்போது...

 

manobala

 

 

"சிநேகன் சார் பேசும்போது இப்படத்தின் கதை தெரியாது என்றார்.  நான் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும்தான் கதை தெரியாது. இந்த இயக்குநருக்காவது தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையை திருடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க. ஏன்னா நிறைய பேர் தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க. பண்டிகையை கொண்டாடப்போறதில்லை. இந்த படைப்பாளன் நிச்சயம் வெற்றிபெறுவான் என்றார்"

 

 

சார்ந்த செய்திகள்