Skip to main content

சீனாவில் அமோக விலைக்கு விற்ற தமிழ் திரைப்படம் !

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
kennadi club

 

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை கதைதான் ராஜா (Content is King) மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவுள்ள "கென்னடி கிளப்" படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்படும் படமாக நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது "கென்னடி கிளப்" படம். இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிஸ்ஸான விஜய் சேதுபதி- சிவகார்த்திகேயன் காம்போ திரைப்படம்!- ரசிகர்களுக்கும் லாஸ்

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

கடந்த 2009ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிக் குழு படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் சுசீந்திரன். இதனையடுத்து நான் மஹான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். 
 

suseenthiran

 

 

தமிழ் சினிமாவில் இவர் நுழைந்தபோது வருடத்திற்கு ஒரு படம் என்று பொறுமையாக கவனம் செலுத்தி எடுத்தவர் இந்த வருடத்தில் மட்டும் ஒருசேர நான்கு படங்களில் பணிபுரிந்து வருகிறார். இதில் வெண்ணிலா கபடிக்குழு இவருடைய எழுத்திலும், கெண்ணடி கிளப் என்றொரு படம் இவருடைய இயக்கத்திலும் வெளியாகியுள்ளது. கெண்ணடி கிளப் பெண்கள் கபடிக்குழுவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 

விஷாலை வைத்து இவர் இயக்கிய படம் பெரும் வெற்றிபெற்றது. அப்போது அது அஜித் நடிப்பில் ஆரம்பம் படத்துடன் வெளியாகியிருந்தது. இருந்தாலும் அஜித் படத்திற்கு இணையாக ஓடியது பாண்டிய நாடு. இப்படத்தில் விஷால் ரௌடிகளை துவம்சம் செய்யும் மாஸ் ஹீரோவாக இல்லாமல், இன்னோசண்ட்டான சாதாரன மனிதரை போல நடித்திருப்பார். விஷாலுடைய கதாபாத்திரத்திற்கு இணையாக அவருடைய நண்பனாக நடித்திருக்கும் விக்ராந்தின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்ததை பலரும் பாராட்டினார்கள். இது விக்ராந்திற்கு கம்பேக் என்றும் பலரும் தெரிவித்தார்கள். 
 

இந்நிலையில் கெண்ணடி கிளப் புரோமோஷனில் இயக்குனர் சுசீந்திரன், “இந்த படத்தில் முதன் முதலாக விஷால் கதாபாத்திரத்திற்கு சிவகார்த்திகேயனையும், விக்ராந்த் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியையும் நினைவில் வைத்துதான் முதலில் எழுதினேன். அதனை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் மாற, அனைத்துமே மாறியது. விஷால் இப்படத்தின் கதையை கேட்டார். பின் அவருக்கு இப்படத்தின் கதை பிடித்துவிட்டதால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுத்தோம்” என்றார்.
 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் நடித்திருந்தால் ஒருவேளை அஜித்தும் விஜய்யும் தொடக்கத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்த ராஜாவின் பார்வையில் படம் போல இருந்திருக்கும். இது அவர்களுடைய ரசிகர்களுக்கும் பெரிய லாஸ்தான். 

 

 

Next Story

எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ, அங்கெல்லாம் படமாகும் 'கென்னடி கிளப்'

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
Kennedy club

 

பாரதிராஜா - சசிகுமார் - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. 

 

நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகியுள்ளது. மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருந்திருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மகாராஷ்டிரா சென்றுள்ளது படக்குழு. அங்கிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 25 ஆயிரம் பேர் பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக 'செட்' அமைத்து மைதானம் தயார் செய்து  விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

 

 

இதன்பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் போட்டிக்கிடையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான். அதன்பிறகு, கதாநாயகனும் பாரதிராஜாவும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக 'செட்' அமைத்து நடக்கவுள்ளது. அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் அங்கேயே நடைபெறவுள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சசிகுமாரைத் தவிர, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், 'புதுமுகம்' மீனாட்சி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். டி.இமானின் இசையில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கலையை பி.சேகர் அமைக்கிறார். சீன மொழியில் டப்பிங் உரிமத்திற்கு ரூ. 2 கோடிக்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது. சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ள  நிலையில், இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.