Skip to main content

"இங்கேயும் வந்துவிட்டாயா… சரியான தொல்லையப்பா" - கார்த்தி கிண்டல்

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

karthi tease about jayaram first look poster in ponniyin selvan

 

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு வரும் படக்குழு இன்று ஜெயராம் நடிக்கும் 'ஆழ்வார்க்கடியான் நம்பி' கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டது. பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இந்த போஸ்டரை கார்த்தி தனது ட்விட்டர் பக்க்கத்தில் பகிர்ந்து, "ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை… சரியான தொல்லையப்பா." என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் மூலம்  'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியை ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் நம்பி' கதாபாத்திரம் தொடர்ச்சியாக தொல்லை செய்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது என தெரிகிறது. இதே போல் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் போஸ்டர் வெளியான போதும் கார்த்தி திரிஷாவை கிண்டல் செய்வது போல் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (06.09.2022) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்