Skip to main content

"அதனால்தான் இரண்டு படமும் ஃப்ளாப்" - அட்லீயை கடுமையாக விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

k rajan about atlee

 

ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காசேதான் கடவுளடா’. இப்படத்தில் ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 1972 ஆம் ஆண்டு வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். 

 

இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படம் வருகிற 24 ஆம் தேதி (24.03.2023) வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது படக்குழு. அப்போது படக்குழுவுடன் தயாரிப்பாளரும் வினியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பல விஷயங்களை பேசிய அவர் அட்லீ இயக்கிய பிகில் படத்தை கடுமையாகச் சாடினார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் சக் தே இந்தியா என்ற தலைப்பில் ஒரு படம் வெளியானது. படத்தில் தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லை. அதே படம் தான் தமிழில் வெளியான பிகில். அதில் ஹாக்கி இதில் கால்பந்து. தயாரிப்பாளரை கால் பந்தாக நினைச்சு எட்டி எட்டி உதைச்சிட்டாங்க. தயாரிப்பு நிறுவனம் பெரிய கம்பெனி என்பதால் அதை சமாளிச்சுட்டாங்க. வெளிப்புற யூனிட்டில் ஜூனியர் ஆர்டிஸ்டுகளிடம் 10% கமிஷன் வாங்குறாரு அந்த டைரக்டர். தயாரிப்பாளரிடம் கோடிக் கணக்கில் சம்பளம். அது மட்டுமில்லாமல் 10% கமிஷன். இது நியாயமா. அந்த பணம் நிக்காது. அதனால் அவருடைய இரண்டு படமும் ஃப்ளாப். வீட்டை வித்தார். அவர்கள் எல்லாம் துரோகிகள்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அல்லு அர்ஜுனுக்கு ஜோடி - இரண்டு ஹீரோயின்களிடம் அட்லீ பேச்சு வார்த்தை

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
trisha or samantha to pair in atlee next allu arjun movie

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

trisha or samantha to pair in atlee next allu arjun movie

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருவதையடுத்து தற்போது ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாளான வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. த்ரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், மலையாளத்தில் ஐடென்டிட்டி, ராம் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா படத்தை கைவசம் வைத்துள்ளார். சமந்தா சிட்டாடெல் நெப் தொடரை வைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வருகிற 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் விருந்தாக வெளியாகிறது.

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.