Skip to main content

இயக்குனர் சுசீந்திரன் படத்தில் நடிகர் ஜெய்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

jai


'கென்னடி கிளப்' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் விக்ரம் பிரபுவை வைத்து இயக்க திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

 

இயக்குனர் சுசீந்திரன், சில மாதங்களுக்கு முன்பு காலையில் நடைப்பயிற்சி சென்றபோது, சிறுவிபத்தில் சிக்கினார். அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால், சொந்த ஊரில் குடும்பத்தினருடன் இருக்கிறார். 

 

இந்த லாக்டவுனில் புதிதாகக் கதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கதையில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கின்றார். மேலும், முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க உள்ளார். கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து பழைய நிலைக்குத் திரும்பிய பின்னர் இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்வு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்