Skip to main content

தனுஷ் - நயன்தாரா வழக்கு; உயர்நீதி மன்றம் உத்தரவு

Published on 10/03/2025 | Edited on 10/03/2025
dhanush nayanthara case update

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படம் நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. முன்னதாக இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது, அதில் நானும் ரௌடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இதையடுத்து அந்த நோட்டீஸுக்கு எதிர்வினையாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  மேலும் அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் பாருங்கள் என்று தனது இஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து வெளியாகியிருந்த அந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக இடம் பெற்றிருந்தது.

அதன் பின்பு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், அனுமதியின்றி நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை பயன்படுத்தியதாக நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் எதிர் மனுதாரராக நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை சேர்த்து, நெட் ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்ததோடு, எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் எதிர் மனுதாரர்களின் பதிலுக்கு தனுஷ் தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்