Skip to main content

இயக்குநர் ஆர்.கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் !

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

court issues warrent director rk selvamani

 

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர்.கே செல்வமணி, சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் பைனான்சியர் போத்ரா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சினிமா பைனான்சியர் போத்ரா ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இயக்குநர் ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து, வழக்கு விசாரணையை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்