Skip to main content

"பத்து வருஷமா ஏன் தமிழில் நடிக்கல..." - மம்மூட்டி பகிர்ந்த 'பேரன்பு'  

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

ராம் இயக்கத்தில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள திரைப்படம் 'பேரன்பு'. மலையாள நடிகர் மம்மூட்டி பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு  தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 1) வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிகையாளர்களிடம் மம்மூட்டி பேசியது...

 

peranbu mammooty



"இந்தப் படத்தைப் பற்றி நான் ஒன்னும் பேசவேண்டியதில்லை, படம்தான் பேசும். ரொம்ப நாளா தயாரிப்பில் இருந்த படம், ரொம்ப கவனமா உருவாக்கப்பட்ட படம். பல திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டது. பல வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பார்த்து பாராட்டியுள்ளனர்.

நான் தமிழில் பத்து வருஷங்கள் கழித்து படம் நடிக்கிறேன். பத்து வருஷமா ஏன் தமிழில் நடிக்கலைன்னு கேட்டா, பத்து வருஷமா நான் நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன், தமிழில்தான் நடிக்கல. ரொம்ப வித்தியாசமான கதை இது. இந்தப் படத்தில் நடிக்க நான் பெருசா கஷ்டப்படல. இந்த மாதிரி ஒரு குழந்தை எனக்கு இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன், நடிப்பது ஈஸியாகிடுச்சு. இந்த மாதிரி குழந்தைகள் உங்களுக்கு இருந்தாலும் இப்படித்தான் இருக்கும். நாமெல்லாம் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுறோம்னுதான்  சொல்லணும்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள், நடக்குறத பாக்கும்போது ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு உங்களுக்கு தோணுதா? இல்லை, அவுங்க கஷ்டப்படல, அவுங்களுக்கு இயல்பே அதுதான், அவுங்களுக்கு அது பழக்கமாகிடுச்சு. பாக்குறவங்களுக்கு அப்படி தெரியும். அந்தக் குழந்தையை வளக்குறவங்க, அப்பா அம்மாதான் ரொம்ப கஷ்டப்படுறாங்க. இது யாரும் சொல்லாத கதைன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா, பலரும் சொல்ல மறந்த கதை. நாங்க எல்லோரும் பெரிய அன்போட இந்தப் படத்தை எடுத்துருக்கோம். இனி இதை நீங்கதான் பாத்துக்கணும். இந்தப் படம் அப்படி, இப்படின்னு நான் பேசமாட்டேன். நீங்கதான் பார்த்துட்டு பேசணும். அப்போதான் இது பேசும் படம் ஆகும்."      

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை" - பிரபல நடிகர் பேச்சு!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

FAMOUS ACTOR SPEECH ABOUT HIS POLITICAL ENTRY

 

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கட்சிகள், கூட்டணிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் நடிகர்களை தேர்தல் பிரச்சாரங்களில் களம் இறக்கத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் 'மம்முட்டி', கேரள முதல்வர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றுப் படமொன்றில் நடித்து வருகிறார். இதையொட்டி, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது அவர், "தேர்தல் அரசியலில் எனக்கு எவ்வித ஆர்வம் இல்லை. சினிமா அரசியல் உலகில்தான் எனக்கு ஆர்வம். அதைத் தவிர்த்து வேறு அரசியலில் ஈடுபடப்போவதில்லை. எந்தவொரு கட்சியும் என்னிடம் தேர்தலில் போட்டியிடச் சொல்லவில்லை. அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை. நானும் யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை" இவ்வாறு கூறினார்.

 

 

 

Next Story

“தமிழ்நாட்டுல மேடையில் பேச ரொம்ப பயமா இருக்கு ஏன்னா...”- நடிகர் மம்மூட்டி பேச்சு

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

எம்.பத்மாகுமார் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்று படம் மாமாங்கம். இந்த படத்தில் மம்மூட்டியுடன் உன்னி முகுந்தன், தருண் ஆரோரா, அனு சித்தாரா, கனிகா, இனியா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மலையாள மொழியில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது. 
 

mamooty


வருகிற டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக சென்னையில் செய்தியாளர்களை சந்திதது படக்குழு. அப்போது நடிகர் மம்மூட்டி பேசுகையில், "தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால், சினிமாவில் நான் சரியாகத் தமிழ் பேசியிருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் மேடையில் தப்பு தப்பாகத் தான் பேசுவேன். 

வரலாற்றுப் படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச் செய்வேன். அப்படி இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோஷம்தான் எனக்கு. ஒரு நடிகனாக மக்களிடம் ஒரு வரலாற்றை கொண்டுபோய் சேர்ப்பதே மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். 
 

iruttu


100 வருடங்களுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே இல்லை. கேரளாவே அப்போது இல்லை திருவிதாங்கூர் மற்றும் மலபார் தான் இருந்தது. அப்போது மலையாளம் பேசுபவர்கள், தெலுங்கு பேசுபவர்கள் என்று அனைவருமே மெட்ராஸ் ஸ்டேட்டில்தான் இருந்திருக்கிறோம். பிரிட்டிஷ்காரர்கள் போனவுடன்தான் அனைத்தையும் பிரித்துச் சரி பண்ணினோம். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகளுக்கு ஏற்ப இடங்களை பிரித்துக்கொண்டுள்ளோம். இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய விஷயம்.

மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியைத் தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள்தான் நம்மை படத்துடன் ஒன்றிணைய வைக்கும். அந்தக் காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது. இந்தப் படம் சாதாரணமான ஒரு ரிவெஞ்ச் ஸ்டோரி கிடையாது. என்றைக்கோ நடந்த ஒரு சம்பவத்துக்காக தொடர்ச்சியாகப் பழிவாங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை.
 

jada


யாருக்காக கொல்கிறோம், யாருக்காக சாகிறோம் என்பதே படத்தின் க்ளைமாக்ஸில் சொல்லப்பட்டுள்ள விஷயம். ஆகையால் தான் இந்தப் படம் எப்போதுமே முக்கியம். மீதி அனைத்தையுமே படம் பேசும். இந்தப் படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன் என்பதற்காக இயக்குனர் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார். இதை விட 'பேரன்பு' எளிதான படமாக இருந்தது. தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணிக் கொடுத்தார்" என்றார்.