Skip to main content

"பேட்ஸ்மேன்கள் ஆட்டத்துல அது இல்ல" -  தோல்வி குறித்து கோலி!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020
virat kohli

 

 

ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முன்னிலையில் இருந்த இந்திய அணி, பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் படுதோல்வியை சந்தித்தது. 

 

தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்கள் இன்டென்ட் இல்லாமல் ஆடியதால் தோல்வியை சந்த்திதாகவும், இரண்டு நாள் நன்றாக ஆடிவிட்டு ஒரு மணிநேரத்தில் தோற்று விட்டதாகவும் கூறினார்.

 

தோல்வி குறித்து அவர் "அந்த எண்ணங்களை வார்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். நாங்கள் 60 ரன்கள் முன்னிலையொடு இருந்தோம். அங்கிருந்து சரிந்துவிட்டோம். இரண்டு நாட்களாக நன்றாக ஆடி, நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் ஒரு மணிநேரத்தில் அதனை இழந்து விட்டோம். இது உண்மையாகவே வேதனைபடுத்துகிறது. இன்று பேட்டிங்கில் இன்டென்ட் இல்லை. அது பிரதிபலிக்கப்படவேண்டிய ஒன்று. முதல் இன்னிங்ஸிலும் இதே போல் பந்து வீசினார்கள். அப்போது எங்கள் நோக்கம் ரன்கள் எடுப்பதாக இருந்தது. பாக்ஸிங் டே போட்டியில், வீரர்கள் இன்டென்ட்டோடு விளையாடி, வெற்றிபெறுவர்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.