Skip to main content

"கனவுபோல் இருந்தது" - நெகிழ்ந்த நடராஜன்...

Published on 04/12/2020 | Edited on 04/12/2020
natarajan

 

 

தமிழக வீரர் நடராஜன், டி.என்.பி.எல். மற்றும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடியதால், இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா - இந்தியாவிற்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான நடராஜன், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் லாபுசாக்னேவையும், ஆஷ்டன் அகரையும் காலி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

 

அறிமுகப்போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக பந்து வீசிய நடராஜானுக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்தநிலையில், இந்தியாவிற்காக  முதல் போட்டியில் விளையாடிய அனுபவத்தை நடராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "இந்திய அணிக்காக விளையாடிய தருணம் கனவுபோல் இருந்தது. என்னை  வாழ்த்திய  உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதிக சவால்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன்" என   கூறியுள்ளார்.