Skip to main content

கோலியை ரன்அவுட் ஆக்கிவிட்டு ரன்குவிக்கும் ரோகித் சர்மா!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கேப்டன் கோலியை ரன்அவுட் ஆக்கும்போதெல்லாம் அதிக ரன்கள் குவித்துள்ளார். இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்து முறை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அரங்கேறியிருக்கிறது.

 

Kholi

 

தென் ஆப்பிரிக்க அணியுடனான ஐந்தாவது இருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தவான் பெவிலியன் திரும்பிய பின்னர், ரோகித் - கோலி இணை சிறப்பாக ரன்குவிப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது, ஸ்டிரைக்கிங்கில் இருந்த ரோகித் சர்மா பந்தைத் தடுத்தாடி விட்டு ரன் ஓடுவதற்காக கோலியை அழைத்துவிட்டு, ஓடாமல் நின்றுவிட்டார். டுமினி தன் கையில் சிக்கிய பந்தை நேராக நான்-ஸ்டிரைக்கிங் பகுதியில் இருந்த விராட் கோலியின் ஸ்டம்புகளில் வீசி கோலியை பெவிலியனுக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து வந்த ரஹானேவையும் ரோகித் அதே பாணியில் அவுட் ஆக்கிவிட்டு, நிதானமாக ஆடத்தொடங்கினார். இந்தப் போட்டியில் 115 (126) ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் ரோகித் சர்மா. இந்தப் போட்டியில் இந்திய 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு முன்னர், 2011ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்களும், 2013ஆம் ஆண்டு ஆஸிக்கு எதிராக 209 ரன்களும், 2014ஆம் ஆண்டு 264 ரன்களும், 2016ஆம் ஆண்டு 124 ரன்களும், நேற்றைய போட்டியில் 115 ரன்களும் ரோகித் சர்மா, தனது இணை ஆட்டக்காரர் கோலியை அவுட் ஆக்கிய பின்னர் எடுத்திருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்தப் பாணியை சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன் கலாய்த்து வருகின்றனர். 

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

மும்பை அணியை துவம்சம் செய்து வரலாற்று சாதனை படைத்த சன் ரைசர்ஸ்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
mi vs srh ipl live score update sun risers creates history record in ipl

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்த ஹெட் தொடர்ந்து தனது அதிரடியை காட்டினார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார்.  அவருடன் இணைந்த அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் மார்க்ரம் மற்றும் கிளாசன் இணைந்தனர். அவர்களும் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.  கிளாசனும் தன் பங்கிற்கு 7  சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார். இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு கிறிஸ் கெயில் 175 ரன்கள் குவித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி  களமிறங்கி 2 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் எடுத்துள்ளது.