Skip to main content

இனி 'பாகிஸ்தான் சூப்பர் லீக்' தொடர் நடக்காது; அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு...

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

fghgfhgfh

 

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல பாகிஸ்தானில் ஆண்டுதோறும் நடக்கும் கிரிக்கெட் தொடர் பி.எஸ்.எல் கிரிக்கெட் தொடர். இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனமும், ஐ.எம்.ஜி நிறுவனமும் இந்த தொடருக்கு ஸ்பான்சர் வழங்கி தயாரித்து வந்தன. மேலும் உலக அளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வந்தன. இந்நிலையில் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த ஸ்பான்சரை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனால் அந்நாட்டின் மிக பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படும் பி.எஸ்.எல் தொடர் இனி உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஸ்பான்ஸர் விலகியதால் அந்த தொடர் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பி.எஸ்.எல் தொடருக்கு தயாரிப்பு பங்குதாரராகவும், போட்டிகள் நடப்பது, போட்டி ஒளிபரப்பு, விளம்பரம் என அனைத்தையும் ஐஎம்ஜி - ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து நடத்தி வந்தது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய நஷடத்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

அம்பானி இல்லத் திருமண விழா; மெய்சிலிர்த்த ரஜினி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
rajinikanth about ambani family pre wedding

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில், ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

கோலிவுட்டிலிருந்து ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜாம் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். நிதாவும் முகேஷ் அம்பானியும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் கைலாசத்தையும் வைகுண்டத்தையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளது போல் உள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.