Skip to main content

நான்காவது டெஸ்ட்; இந்திய அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

prasidh krishna

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ட்ரா ஆன நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது.

 

இதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில், இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதனிடையே நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பிரசித் கிருஷ்ணா, மாற்று வீரராக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால், நாளைய போட்டியில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.