Skip to main content

உலகக்கோப்பை அரையிறுதி.... மைதானத்திலிருந்து ரசிகர்களை கைது செய்து இழுத்து சென்ற போலீஸ்...

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

நேற்று இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த போட்டி இன்று மீண்டும் தொடரும் நிலையில், நேற்றைய போட்டியில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு கோஷம் போட்ட 4 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

police arrested four men in the middle of worldcup semifinal match

 

 

நேற்றைய போட்டியின் இடையே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வாசகங்கள் எழுதப்பட்ட டீ-ஷர்ட் அணிந்து, தனி நாடு வேண்டும் என்று 4 சீக்கியர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.