இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு ஓவர்களிலேயே ரன் ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அதனை அடுத்து வந்த வீரர்களும் ரன் எடுக்க திணறினர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கவாஜா 50 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனையடுத்து 237 ரன்கள் என்று இந்திய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.