Skip to main content

கடவுள் எங்களை வெளியேற விடமாட்டார்! - உற்சாகத்தில் மெஸ்ஸி

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

கடவுள் தங்களை உலகக்கோப்பையில் இருந்து வெளியேற விடமாட்டார் என அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி உற்சாகமாக பேசியுள்ளார். 
 

messi

 

 

 

ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியது. டி பிரிவில் இருக்கும் அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து அணியுடன் மோதிய முதல் போட்டியில் 1 - 1 என்ற கோல்கணக்கில் டிரா ஆனது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி பெனால்டி கிக்கைத் தவறவிட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல், குரோஷியா உடனான இரண்டாவது போட்டியில் அர்ஜெண்டினா மிகவும் மோசமாக செயல்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். அந்தப் போட்டியில் குரோஷியா 3 - 0 கோல்கணக்கில் வெற்றிபெற்றது. 
 

இதன்மூலம் வெறும் 1 புள்ளியுடன் இருந்த அர்ஜெண்டினா அணி, நைஜீரியா உடனான போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல், அந்தப் போட்டியில் அர்ஜெண்டினா 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, டாப் 16க்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றது. இந்த வெற்றி குறித்து பேசிய லியோனல் மெஸ்ஸி, இதுபோன்ற பதற்றமான போட்டியை என் வாழ்க்கையில் விளையாடியதே இல்லை. இதனால், அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், கடவுள் தங்கள் அணியை தொடரில் இருந்து வெளியேற்றமாட்டார் என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

 

Next Story

மெஸ்ஸி பெயருக்கு இவ்வளவு பவரா?; சாதுரியமாக தப்பித்த மூதாட்டி

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.

 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வெறுப்பான முறையில் மெசேஜ் அனுப்பியவர்களுக்கு மேக்ஸ்வெல் மனைவி பதிலடி

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

'For those who send hate messages...' - Australia cricketer Maxwell's wife explains

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தோற்றதால், அத்தோல்வி ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதே வேளையில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியா அணி வீரரான மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், தனக்கு எதிராக ரசிகர்கள் சிலர் வெறுப்புடன் மெசேஜ்களை அனுப்புவதாக வினி மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வெறுப்புடன் தனிப்பட்ட முறையில் எனக்கு மெசேஜ் அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தையின் அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்சனைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.