Skip to main content

இந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல்?

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 இருபது ஓவர்கள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஆனால், இந்தியா-வங்காளதேசத்துக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், வங்காளதேச வீரர்கள் தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் 10க்கும் மேற்பட்ட கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும், கிரிக்கெட் வாரியம், அதை நிறைவேற்றாத பட்சத்தில் கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டோம் என்று அந்நாட்டு வீரர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வங்காளதேச அணியின் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் சகிப் அல் ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இதனால் திட்டமிட்டபடி இந்தியா வங்க தேசம் அணிகளுக்கிடையேயான போட்டி நடக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.