Skip to main content

‘பித்தப்பை கல்லை சரி செய்ய...’ - ‘சித்த முத்திரை’ மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
| Mudra | Dr Salai Jaya kalpana |

டையாபிட்டிக், பிபி, பித்தப்பை கல் போன்ற பல நோய்களை முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

டையாபிட்டிக் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லாமல் முத்திரைகள் மூலமாகவே சரியான முறையில் தொடர்ந்து செய்தார்கள் என்றால் நிச்சயமாக இதற்கு தீர்வு காண முடியும். அடுத்து பி.பி.யை பொறுத்தவரையில் முறை கூட தேவையில்லை, மூன்று முத்திரைகள் மட்டுமே செய்தல் போதுமானது. பொதுவாக இந்த மூன்று முத்திரைகளையும் செய்ய வைத்து, பி.பி. அளவின் அந்த நபருக்கு எந்த முத்திரையில் குறைகிறதோ, அதையே அவர்கள் உடலுக்கு ஒத்து வரும் முத்திரை என்று கண்டுபிடித்து அதை முறையாக செய்யலாம். 

இதில் பி.பி. மட்டுமல்லாது, கூடவே இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இதய முத்திரையில் நன்றாக கண்ட்ரோலுக்கு கொண்டு வர முடியும். இதய முத்திரை என்பது ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும். கட்டைவிரல் நுனியுடன் மிச்சமுள்ள மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும். 15 வருடம் தொடர்ந்து பி.பி.யினால் சரி ஆகாதவர்கள், இந்த முத்திரையை ஒரு மூன்று மாதம் நாங்கள் செய்ய வைப்போம். முதல் மாதம் இரு வேளை மாத்திரைகளை ஒரு வேலையாக குறைத்து, இரண்டாவது மாதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று கொடுத்து அப்படியே படிப்படியாக குறைக்க செய்வோம்.

| Mudra | Dr Salai Jaya kalpana |

அடுத்து வியான முத்திரையும் செய்து வரவேண்டும். வியாபித்தல் என்று பொருள். இதை தமிழில் பரவுகால் என்று பெயர். ஒரு சிலருக்கு எந்த உணவு எடுத்துக்கொண்டாலும், அது உடல் எடுத்து கொள்ளாது. உடலில் அதனதன் செல்களுக்கு சரியான உணவின் சக்தி போய் சென்றடைய இந்த முத்திரை உதவி செய்யும். வியானன் என்பது உடலில் இயங்கும் பத்து வாயுக்களுள் ஒன்று. உடல் முழுக்க வியாபித்து பரவும்படி இந்த முத்திரை உதவி செய்கிறது. இது நிணநீர் மண்டலத்தையம் சரி செய்யும். அதாவது சளி பிடிக்கும் போது தொண்டையிலும், காதிலும், கழுத்திலும் நெறி கட்டிக்கொள்ளும். மேலும் தோளில் அடிபடும்போது அக்குள் பகுதியில் நெறி கட்டிக்கொள்ளும். இதனால் நிணநீர் மண்டலத்தின் முடிச்சுகளில் நீர் கட்டிக் கொள்ளும். வயதாக வயதாக இது ஏற்படலாம். கழுத்தில் தசை சுருங்கி தொங்குதல், கண்களுக்கு கீழே பாக்கெட் போல வீங்கி இருப்பது போன்ற வயோதிக மாற்றத்திற்கு வியான முத்திரை செய்து நன்றாக குணப்படுத்தலாம்.

தசை வாயுக்களில் 5 வாயுக்கள் பிரதானமானது. அதாவது பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் ஆகும். பிராணன் என்பது சக்தியை கொடுப்பது, அபானன் என்பது உடலில் கழிவுகளை வெளியேற்றுவது. உதானன் என்பது உடலில் சத்துக்கள், நிணநீர் மண்டலத்தை ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு சுத்திகரிப்பது. இப்படி முத்திரை அப்போதைக்கு மட்டும் ஏதாவது ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு முழுமையான பலனை பார்க்க முடியாது. முறையாக கழிவு நீர் முத்திரையில் ஆரம்பித்து பஞ்ச பூதங்களை நெறிப்படுத்தி முறையான வரிசையில் தொடர்ந்து விடாமல் முத்திரைகளை செய்பவர்களுக்கு, தைராய்டு, டையாபிட்டிஸ், பி.பி என்பது சரியான அளவை தொட்ட பின்பு மீண்டும் அது தொந்தரவை தருவதில்லை.

| Mudra | Dr Salai Jaya kalpana |

அடுத்து பித்தப்பை கல் பிரச்சனை. புள்ளி விவரங்கள் படி 50% சதவிகித பேர்க்கு அவசியம் இன்றி பித்தப்பையை நீக்கி விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக பித்தப்பை கல் இருப்பவர்களுக்கு பிரதான அறிகுறி அடிக்கடி ஏப்பம் வருவது தான். அப்படி இருப்பவர்கள் டெஸ்ட் செய்து பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக பித்தப்பையில் கல் இருக்கும். இதற்கு வாயு முத்திரை மற்றும் உதான முத்திரை நல்ல தீர்வு தரும். ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால் கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் கணுவைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது வாயு முத்திரை. கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ள வேண்டும். இதுதான் உதான முத்திரை. 

இந்த வாயு முத்திரையை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அடிக்கடி செய்து வரலாம். இது நம் உடலில் புதிதாக வாயுக்கள் ஏற்படாமல் தடுக்கும். சிலருக்கு வலது தோள்பட்டை முதல் நடு முதுகு வரை வலி இருக்கும். நெஞ்சு கரிப்பது, ஏப்பம் அடிக்கடி விடாது வருவது, சிலருக்கு பித்தம் அதிகரித்து வாந்தி கூட ஏற்படும். அவர்கள் இந்த உதான முத்திரை தினசரி இரண்டு வேளை 20 நிமிடம் என்று செய்ய செய்ய பித்தப்பை கல் மட்டுமல்லாது, அதனால் ஏற்படும் அவஸ்தைகளையும் சரி செய்ய முடியும். மருந்துகளில் அஷ்டசூரணம் என்று சொல்லப்படும் எட்டு வகை பொருட்களால் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம், பெருங்காயம்,சீரகம், இந்துப்பு போன்றவையால் ஆன சூரணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.